Tuesday 7 October 2014

நான் கூறாததையும், கூறவேண்டியதையும் பற்றியே அதிகம் அக்கறை கொண்ட தோழர் “தோழமையுடன் மறைமலை” கருத்துக்கு எனது எதிர்வினை

தோழமையுடன் மறைமலை:-
//உங்கள் வழியில் நீங்கள் செல்லுங்கள் என்வழியில் நான் செல்கிறேன் என்பதன் பின்னால் உள்ளது. உங்கள் வியாபரத்தை நீங்கள் பாருங்கள், என் வியாபாரத்தை நான் பார்க்கிறேன். முடிந்த வரை சுருட்டுவோம் என்கிற 'பிழைப்புவாதம்' தான் இருக்கிறது.//

உங்கள் கட்சியின் வழியில் நீங்கள் செல்கிறீர்கள் எனது கோட்பாட்டின் வழியில் நான் செல்கிறேன் என்றால் பிழைப்பு வாதம் என்று கூறுகிறீர்கள். நிங்கள் பேசுவது போல் கொச்சையான அரசியல் வழியில் சென்று உங்களுக்கு பதில் அளிக்க முடியும்.

//"மார்க்சியத் தத்துவம்", "மார்க்ஸ் - எங்கெல்ஸ் வாழ்வும் படைப்பும்" என்ற எனது இருநூலையும் முழுமையாக்கி அச்சுக்காக பதிப்பகத்தாரிடம் நேற்று சேர்த்துவிட்டேன். // என்று நான் இட்ட பதிவுக்கு நீங்கள்;-

// மார்க்சிய தத்துவத்தின் வளர்ச்சியில் மாவோவின் பங்களிப்பு முக்கியமானது.

மாவோவைத் தவிர்த்து விட்டு விஞ்ஞான சோசலிசம் பேசுவது திரிபுவாதத்திலிருந்து மீளவோ அல்லது திரிபுவாதத்தை வெல்ல முடியாது.

சோசலிசத்திற்கு மாவோவின் பங்களிப்பை தவிர்த்து விட்டு மார்க்சியம் பேசுவது குறை மார்க்சியம் தான்.

மார்க்சிய லெனினிய மாசே துங் சிந்தனை என்பது தான் இன்றைய மார்க்சியம்.//

இதற்கு நான் அளித்த பதில்,
// ஏன் தோழர் ஸ்டானை விட்டுவிட்டீர்கள். ஐம்பெரும் தலைவர்களின் மாவோவை மட்டும் முன்நிறுத்துவது என்ன வாதம் தோழர்.

மார்க்ஸ் எங்கெல்ஸ் ஆகியோருக்கு அடுத்து லெனின் மார்க்சியத்தை வளர்த்ததை குறிப்பிடுவது திரிபுவாதத்துக்கு இடம் கொடுக்காது தோழர். இவைகளின் தொடர்ச்சியாகத் தான் மாவோவைப் பார்க்க வேண்டும். லெனினியத்தைப் முழுமையாகப் புரிந்து கொள்வதற்கு மார்க்ஸ் எங்கெல்ஸ் காலத்திய மார்க்சியம் அடித்தளமாகிறது. இதில் உங்களுக்கு என்ன பிரச்சினை.
...
மார்க்சைப் புரிந்து கொள்வதற்கு ஆடம்ஸ்மித், ரிக்காடோ ஆகியோர்களையும் படிக்க வேண்டியிருக்கிறது.
....//
நான் மார்க்ஸ் எங்கெல்ஸ் லெனின் ஆகியோரின் மார்க்சிய அடிப்படைகளை முன்வைக்கும் போது உங்களது அரசியல் பிழைப்பு பாதிப்பதால் தான் இவ்வாறு உங்களால் பேச முடிகிறது என்று உங்கள் பாணியில் எழுத முடியும் தோழர்.

//இந்த வார்த்தைகளின் பின் என்ன வர்க்க நலன் இருக்கிறது?// இந்த ஒற்றை வரியைப் பிடித்துக் கொண்டு மார்க்சிய அடிப்படை அறிவு இல்லாமல், ஆதார விளங்கங்கள் இல்லாமல் என்னை //'சந்தர்ப்பவாதம்' பிழைப்புவாதமும் தான்.// என்று எழுதுகிறீர்கள்.

//சந்தர்ப்பவாதம் பற்றி லெனின்:-
"வர்க்கங்களுக்கு இடையே ஒத்துழைப்பை ஆதரித்தல், சோஷலிசப் புரட்சி, புரட்சிகரப் போராட்ட முறைகள் ஆகிய கருத்தைக் கைவிடல், முதலாளி வர்க்க தேசியவாதத்துக்கு உகந்தாற் போல் தகவமைத்துக் கொள்ளுதல், தேசியஇன எல்லைக் கோடுகளும் நாட்டு எல்லைக் கோடுகளும் வரலாற்று வழியில் நிலையற்றவை என்பதை மறந்துவிடல், முதலாளி வர்க்கச் சட்ட முறையை மூடபத்தியுடன் வழிபடுதல், "மக்கள் தொகையில் விரிவான திரள்கள்" (குட்டிமுதலாளிகள் தான் இவ்விதம் குறிக்கப்படுகிறார்கள்) மிரண்டு விடுவார்களோ என்று அஞ்சி வர்க்கக் கண்ணோட்டத்தையும் வர்க்கப் போராட்டத்தையும் விட்டொழித்தல்- சந்தேகத்துககு இடமின்றி இவையேதான் சந்தர்ப்பவாதத்தின் சித்தாந்த அடிப்படைகள்" (சோஷலிஸ்ட் அகிலத்தின் நிலையும் கடமைகளும்)//

என்ற எனது பதிவுக்கு நீங்கள், // தேசிய இன எல்லைகளுக்கும், விடுதலைக்கும் போராட வேண்டிய தமிழ்ச் சமூக நிலைமையில் இந்த மேற்கோள் இங்கே எப்படி பொருந்தும்.// என்று பின்னூட்டம் இட்டுள்ளீர்கள். மார்க்சியத்தின் அடிப்படைகளை மார்க்சிய ஆசிரியர்களின் நூல்களில் எப்படி அறிந்து கொள்வது என்பதைக் கூட தெரியாமல், இந்த மேற்கோள் இங்கு பொருந்தாது என்று மொட்டையாக பேசுகிறீர்கள்.

     நம் நாட்டில் காணப்படும் சந்தர்ப்பவாதத்துக்கு பதிலளிக்கவே இதனை பதிந்தேன். ஆனால் இதில் காணப்படும் அர்த்த செறிவை புரிந்து கொள்ளாமல், சோஷலி புரட்சி என்ற ஒற்றை வார்த்தையைப் பிடித்துக் கொண்டு இந்த மேற்கோள் கொடுக்கிற எச்சரிக்கையை கவனிக்காது விட்டுவிடுகிறீர்கள்.

இதற்கான விளக்கத்தை உங்கள் எழுத்தோடு, பதில் இட்டிருந்தேன்,
// தேசிய இன எல்லைகளுக்கும், விடுதலைக்கும் போராட வேண்டிய தமிழ்ச் சமூக நிலைமையில் இந்த மேற்கோள் இங்கே எப்படி பொருந்தும்.

நிலபிரபுத்துவம் வீழ்த்தப்பட்டு ஒரு தேசிய அரசு உள்ள சமூக அமைப்பில் சோசலிசப் புரட்சிக்கான சூழலில் உள்ள சமூகத்திற்கு இந்த மேற்கோள் பொருந்தக் கூடியது.

தேசிய இன எல்லைகள் பறிபோய்க் கொண்டுள்ள சூழலில் இந்த மேற்கோளைத் சொல்வது. பண்ணாட்டு மூலதனம் சார்ந்த ஏகாதிபத்திய பொருளாதாரத்திற்கு சாதகமாகவும், தேசிய ஒடுக்குமுறைக்கு ஆதரவாகவும் தான் இருக்கும்.

இங்கே நடத்தப்பட வேண்டியது தேசிய விடுதலைப் புரட்சி என்ற புதிய சனநாயகப் புரட்சி, சோசலிசப் புரட்சி அல்ல.

Eswaran Ak :-தோழமையுடன் மறைமலை @ புதிய சனநாயகப் புரட்சி, சோஷலிசப் புரட்சிக்கு எதிரானது கிடையாது, அதே போல் சோஷலிசப் புரட்சியின் கோட்பாடு புதிய சனநாயகப் புரட்சிக்கு எதிரானது கிடையாது. இரண்டுக்கும் இடையே உள்ள இயக்கவியல் தொடர்பை முதலில் புரிந்து கொள்ள முயற்சியுங்கள்.
      ….
பாட்டாளி வர்க்க சர்வாதிகார ஆட்சியை நோக்கியே பாட்டாளி வர்க்க அரசியல் செல்கிறது என்பதை புரிந்து கொள்ளாமல் புதிய சனநாயக் புரட்சியைப் புரிந்து கொள்ள முடியாது.

கம்யூனிச சமூகம் இரண்டு கட்டங்களைக் கொண்டது முதல் கட்டம் சோஷசலிச சமூகம், இரண்டாம் கட்டம் கம்யூனிச சமூகம். இரண்டாம் கட்டமான கம்யூனிச சமூகம் பற்றிய மார்க்சிய ஆசான்களின் கருத்துக்கள் சோஷலிச சமூகத்தில் தான் படிக்க வேண்டும் இங்கு பேசக் கூடாது என்று கூறமுடிமா?

உங்களது அறியாமையை எல்லாம் அறிவாகப் புரிந்து கொண்டு, அடுத்தவர்களின் பாதையில் குறுக்கிடாதீர்கள்.//

மேலும்,
// "சோஷலிசப் புரட்சி" என்ற வார்த்தை உங்களது கண்களில் பட்டவுடன், என்னை எதிர்ப்பதாக நினைத்து பதிவிட்ட உங்களது பின்னூட்டம் கீழ்காணும் லெனின் கருத்தை புரிந்து கொள்பவர்களை தடுக்க முயற்சிக்கிறது. இதனை. இந்த முகநூல் குழுவின் சார்பாக உங்களை மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

-புரட்சிகரப் போராட்ட முறைகள் ஆகிய கருத்தைக் கைவிடல்,

-முதலாளி வர்க்க தேசியவாதத்துக்கு உகந்தாற் போல் தகவமைத்துக் கொள்ளுதல்,

-தேசியஇன எல்லைக் கோடுகளும் நாட்டு எல்லைக் கோடுகளும் வரலாற்று வழியில் நிலையற்றவை என்பதை மறந்துவிடல்,

-முதலாளி வர்க்கச் சட்ட முறையை மூடபத்தியுடன் வழிபடுதல்,

-"மக்கள் தொகையில் விரிவான திரள்கள்" (குட்டிமுதலாளிகள் தான் இவ்விதம் குறிக்கப்படுகிறார்கள்) மிரண்டு விடுவார்களோ என்று அஞ்சி வர்க்கக் கண்ணோட்டத்தையும் வர்க்கப் போராட்டத்தையும் விட்டொழித்தல்-
சந்தேகத்துககு இடமின்றி இவையேதான் சந்தர்ப்பவாதத்தின் சித்தாந்த அடிப்படைகள்//

இதனையும் புரிந்து கொள்ளும் திறமற்று நீங்கள்:-
//மேற்கோள் தெளிவாகத் தானே உள்ளது. தேசிய இன எல்லைகள் பற்றிய கருத்து தானே சந்தர்ப்ப வாதத்தின் அடிப்படையாகக் குறிப்பிடப்படுகிறது.

இந்திய ஒற்றுமை பேசும் ஆளும் வர்க்கங்களின் கூச்சல் அது தானே. அதையே தான் நீங்கள் லெனின் மேற்கோளைப் பயன்படுத்தி ச் சொல்கிறிர்கள். மார்க்சியத்தில் தேசிய விடுதலைக்கான மேற்கோள்கள் உங்களின் கண்ணில் படுவதே இல்லையே. தேசிய விடுதலைச் சித்தாந்தம் சந்தர்ப்பவாதம் என்று சொல்லத் தனே இம்மேற்கோளைப் பதிவிடுகிறிர்கள். தமிழகத்தில் மார்க்சியத்தில் முக்கிய விவாதமாக உள்ள தேசிய விடுதலை குறித்து சரி என்றோ தவறு என்றோ வெளிப்படையாக நீங்கள் பேச முடியாததற்கு என்ன காரணம். மார்க்சியத்தை சந்தர்ப்பவாத நோக்கில் பயன்படுத்துவது தானே.//

மேற்கோளில், //தேசியஇன எல்லைக் கோடுகளும் நாட்டு எல்லைக் கோடுகளும் வரலாற்று வழியில் நிலையற்றவை என்பதை மறந்துவிடல், முதலாளி வர்க்கச் சட்ட முறையை மூடபத்தியுடன் வழிபடுதல்// என்று தானே லெனின் கூறியிருக்கிறார். இதன் அர்த்தத்தை புரிந்து கொள்ளாமல் //மார்க்சியத்தில் தேசிய விடுதலைக்கான மேற்கோள்கள் உங்களின் கண்ணில் படுவதே இல்லையே.//

என்று என்னிடம் கேட்கிறீர்கள். லெனினது இந்தக் கருத்து தேசிய விடுதலைக்கு எவ்வகையில் எதிரானது. தேசியஇன எல்லைக் கோடுகளும் நாட்டு எல்லைக் கோடுகளும் வரலாற்று வழியில் நிலையற்றவை என்பது தான் இதன் பொருள். தேசியஇள எல்லைக் கோடுகளை நிலையானதாக கருதிப் போராடும் முதலாளித்துவ தேசியத்தை எதிர்த்து எழுதப்பட்டுள்ளது. இது எப்படி தேசிய விடுதலைக்கு எதிரானதாகும். ஒடுக்குதலுக்கு ஆளான தேசத்தின் விடுதலைக்கு எதிரான எந்தக் கருத்தையும் லெனினிடம் காணமுடியாது.

இதனைப் புரிந்து கொள்ளாமல்
, நீங்கள் //தேசிய இன எல்லைகள் குறித்த இம்மேற்கோள் இலங்கை கம்யூனிஸ்டுகளுடன் ஒப்பிடுகையில் சிங்கள இன கம்யூனிஸ்டுகளுக்கு பொருந்தும், அதே போது ஈழத் தமிழ் கம்யூனிஸ்டுகளுக்கு பொருந்தாது. என்பது மட்டுமல்ல. ஒடுக்கப்படும் தேசிய இனத்திற்கு எதிரானதாக அமைந்து விடும்.// என்று எழுதியுள்ளீர்கள்.

இதில் காணப்படும் தவறை சுட்டிக்காட்டி பின்னூட்டம் இட்டுள்ளேன். அது,
//இலங்கை தேசிய எல்லைகள் நிரந்திரமானது என்ற நினைப்புடையவர்களுக்கு எதிரானது இந்த மேற்கோள்கள் என்பதை புரிந்து கொள்வதற்கு உங்களை தடைப்படுத்துவது எது தோழர்?

//தேசியஇன எல்லைக் கோடுகளும் நாட்டு எல்லைக் கோடுகளும் வரலாற்று வழியில் நிலையற்றவை என்பதை மறந்துவிடல்// இந்த லெனினது மேற்கோள் சந்தர்வாத கம்யூனிஸ்டுகளுக்கு எதிரானது. ஈழம் போன்ற இனப்பிரச்சினைக்கு ஆட்பட்ட மக்களுக்கு பொருந்தக் கூடிய சாதகமானது.//

இப்படி நான் எழுதியதற்கு இதுவரை பதிலே இல்லை.

ஆக மார்க்சிய ஆசான்களின் எழுத்துகளை புரிந்து கொள்வதில் இவ்வளவு சிக்கலை வைத்துக் கொண்டு, என்னை "பிழைப்புவாதி" "சந்தர்ப்பவாதி" என்று அருள்வாக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். அதற்கு ஆட்களை வேறு சேர்த்துக் கொண்டிருக்கிறீர்கள். நமது நாட்டில் கூட்டம் சேர்ப்பது எளிது என்பது தெரிந்தது தானே.

தோழர் மறைமலையுடன் சேர்ந்து தோழர் காமராசன் மண்டகொளத்தூர் இவரும் எனது எழுத்துக்களை புரிந்த கொள்ளாமல் பின்னூட்டம் இட்டுள்ளார்//தோழர் ஈசுவரன் அவர்கள் அமைப்பாக்கப்படாத உதிரியாக நின்று செயல்படக்கூடிய ஏகாதிபத்திய பொருளாதாரவாதியாக மட்டுமே தன் கருத்துக்களை வெளிப்படுத்துகிறார்.ஒரு தேசம் என்னவாக இருக்கிறது.அங்கு உற்பத்திமுறை என்ன நிலவுகிறது.அதை நாம் எப்படி புரிந்துகொண்டு சிக்கலை தீர்ப்பது என்பது பற்றியெல்லாம் இவர் கவலைபட்டது இல்லை.இவருடைய சிந்தனைகள் என்பது வெறும் புத்தகங்களாக்குவது மட்டுமே.அதைத்தாண்டி வெகுசன மக்களை சென்றடைய எந்த வழிமுறையும் இவரிடமில்லை!//

நீங்கள் உதிரியாக கருதும் இந்த அ.கா.ஈஸ்வரன் எதனை முன்வைத்து தனித்திருக்கிறான் என்பதை புரியாமல் பேசுகிறீர்கள். தனித்திருந்து செய்யும் வேலை என்ன தெரியுமா? மார்க்சிய தத்துவ அடிப்படைகளை பாதுகாப்பதற்காக அணித்திரட்டுவதே. இதனை எனது நூல்களிலும், முகநூல் பதிவுகளிலும் காணலாம்.

எனது முகநூலில் ஒரு பதிவு இதோ:-

லெனின்:-
"மார்க்சியம் அனுபவத்துவரும் நெருக்கடியின் ஆழத்தைப் பற்றியும், இந்தக் காலப்பகுதியில் நிலவும் ஒட்டுமொத்தமான சமுதாய-பொருளாதார நிலைமைக்கும் அந்த நெருக்கடிக்கும் இடையேயுள்ள சம்பந்தத்தைப் பற்றியும் நாம் மேலே குறிப்பிட்டவற்றைத் தெளிவுபடுத்த இந்த வாதங்களைக் குறிப்பிட்டாலே போதும், இந்த நெருக்கடி எழுப்பும் பிரச்சினைகளை ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. வாய்ச்சவடால் அடித்து அவற்றை அகற்றிவிட நடக்கிற முயற்சிகள் போல் தீங்கிழைக்கும்படியான, கோட்பாடற்ற செய்கை வேறு எதுவும் இருக்க முடியாது.

நெருக்கடியின் ஆழத்தையும் அதை எதிர்த்துப் போராட வேண்டியதன் அவசியத்தையும் உணர்ந்திருக்கும் எல்லா மார்க்சியவாதிகளையும் மார்க்சியத்தின் தத்துவ அடிப்படைகளையும் ஆதாரவரையறுப்புகளையும் பாதுகாப்பதற்காக அணி திரட்டுவதைக்காட்டிலும் முக்கியமானது எதுவும் இருக்க முடியாது, ஏனெனில் மார்க்சியத்தின் பலவகைப்பட்ட "சக பிரயாணி"களிடையே முதலாளித்துவச் செல்வாக்கு பரவியுள்ளதால் எதிரெதிரான திசைகளிலிருந்து இவை திரித்திப் புரட்டப்படுகின்றன."
-மார்க்சியதினுடைய வரலாற்று வளர்ச்சியின் சிலஇயல்புகள்

நீங்கள் எப்படி மார்க்சிய முதலாசிரியர்களின் கருத்துக்களை தம்பும்தவறுமாக புரிந்து வைத்துள்ளீர்களோ, அது போன்ற தவறனா புரிதலை எதிர்த்து நான் "மார்க்சியத் தத்துவம்", "மார்க்ஸ் - எங்கெல்ஸ் வாழ்வும் படைப்பும்" என்ற இரண்டு நூல்களை எழுதியுள்ளேன். எனது நூலினைப் படிக்கும் போது எனது தேவை கண்டிப்பாக புரிந்திருடும்.


தேவையை அறிந்து நான் எழுதுவது, வாசகர்களின் தேவையும் அதுவாகவே இருப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன் என்று எழுதியதை மீண்டும் உங்களுக்கு நினைவுப்படுத்தி, எனது பயணத்தைத் தொடர்வேன் என்பதை உறுதியளிக்கிறேன். எனது பயணத்திற்கு உங்களது எழுத்துக்கள் எதிர்மறையாக பயனளிக்கிறது. உலகில் பயனற்றது என்று ஏதும் கிடையாது. அளவில் தான் மாறுபடும்.

No comments:

Post a Comment