https://www.facebook.com/groups/170679713646132/posts/1673166176730804/?comment_id=1673187890061966&reply_comment_id=1675792909801464¬if_id=1747389846695445¬if_t=group_comment_mention
புதிய
பாதையினருக்கு மார்க்சிய அடிப்படைப் புரிதல் கிடையாது என்று பலமுறை கூறியுள்ளேன். மீண்டும்
ஒரு முறை நிரூபித்துள்ளனர்.
அகநிலை
புறநிலை என்றால் அதை மனிதர்களுக்கு இடையே உள்ள உறவாக மட்டும் புரிந்து கொண்டு அதையே
மார்க்சியம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர் புதிய பாதையினர்.
மார்க்சியத்தில்
புறநிலை என்பது மனிதனைச் சாராமல் வெளியில் இருத்தலைக் குறிக்கிறது. புறநிலையில் இருப்பது
பருப்பொருளாக இருந்தாலும் சரி, வாழ்நிலையாக இருந்தாலும் சரி அனைத்தும் மனிதர்களை சாராமல்
வெளியே இருக்கிறது, இந்த புறநிலையே மனிதனிடம் பிரதிபலிக்கிறது, அதவாது அகநிலையில் பிரதிபலிக்கிறது.
உழைக்கும் மக்களிடம் பிரதிபலிப்பதும், கட்சியிடம் பிரதிபலிப்பதும் புறநிலையில் இருந்தே,
இதில் அகநிலை என்பது உழைக்கும் மக்கள், கட்சி போன்றவை ஆகும்.
லெனின்
ருஷ்யாவின் பொருளாதார வளர்ச்சியை புறநிலையாக கூறியுள்ளார், இந்த சமூகத்தைப் பொருத்தளவில்
இந்தப் பொருளாதார வளர்ச்சியே புறநிலையாகும், மேலும் லெனின் பருப்பொருள், இயற்கை, வாழ்நிலை என்பவைதான் புறநிலை உண்மை என்கிறார். மனிதர்களின் அகநிலையான உணர்வுநிலை என்பது
வாழ்நிலையால் அதாவது புறநிலையால் தீர்மானிக்கப்படுகிறது.
மனிதர்களின் உணர்வுநிலை அவர்களுடைய வாழ்க்கை நிலையை நிர்ணயிப்பதில்லை;
அவர்களுடைய சமூக வாழ்க்கை நிலையே அவர்களுடைய உணர்வைநிலையை நிர்ணயிக்கிறது, என்பது
மார்க்சின் கருத்து
மார்க்சியத்தின் சமூகம் பற்றிய விஞ்ஞானத் தன்மை புறநிலை அகநிலை, அடித்தளம்
மேற்கட்டமைப்பு ஆகியவற்றின் மூலமாகத்தான் விளக்கப்படுகிறது.
புதிய பாதையினருக்கு இதிலேயே குழப்பம்
இருப்பதால் அவர்களின் கருத்துக்கள் அனைத்திலும் இந்தக் குழப்பம் வெளிப்படுகிறது.
புதிய பாதையினர் மீதான எனது விமர்சனம் புறநிலை அகநிலை, அடித்தளம் மேற்கட்டமைப்பு என்கிற அடிப்படையில்தான் வைக்கப்பட்டது. எனது விமர்சனத்துக்கு பதிலளிக்காமல் இருப்பதற்குக் காரணம், புதிய பாதையினருக்கு மார்க்சிய அடிப்படைப் புரிதல் கிடையாது.
ஸ்டாலின்:-
“பருப்பொருள், இயற்கை, வாழ்நிலை என்பவைதான் புறநிலை உண்மை; நமது உணர்வுக்கு அப்பால் - நமது உணர்வைச் சார்ந்திராமல், ஆதாரமாகக் கொண்டிராமல், சுயேட்சையாக - இயங்குபவை அவை. பொருள்தான் முதல். ஏனெனில், அதுதான் புலன் உணர்ச்சிகளுக்கும் கருத்துக்களுக்கும் உணர்வுநிலைக்கும் மூலாதாரம்; தோற்றுவாய். உணர்வுநிலை என்பது இரண்டாம் பட்சமானது; மூலத்திலிருந்து பெறப்படுவது. ஏனெனில், பருப்பொருளின் பிரதிபலிப்பே உணர்வுநிலை, வாழ்வின் பிரதிபலிப்பே உணர்வுநிலை என்று மார்க்சிய பொருள்முதல்வாதத் தத்துவம் கருதுகிறது. மேலும் பருப்பொருளின் விளைவாகச் சிந்தனை வளர்ச்சியுற்று, மிகவும் உயர்ந்த நிலையை எட்டும் போது அது மூளை ஆகிறது. சிந்தனை என்பது பருப்பொருளின் படைப்பு. மூளைதான் சிந்தனையின் உறுப்பு. எனவே, பருப்பொருளிலிருந்து சிந்தனையைப் பிரிக்கமுடியாது. அப்படிப் பிரிப்பது மிகப் பெரிய தவறு செய்வதாகும் - என்று மார்க்சிய தத்துவப் பொருள்முதல்வாதம் கருதுகிறது.”
(இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றியல் பொருள்முதல்வாதமும்)
லெனின் எழுத்துக்களில் இருந்து புறநிலை அகநிலை:-
***********************************************************************
“ருஷ்யாவின் பொருளாதார வளர்ச்சியின் அளவும் (இது ஒரு புறநிலைமை) பாட்டாளி வர்க்கத் திரள்களின் வர்க்க உணர்வின் அளவும் ஒழுங்கமைப்பின் அளவும் (இது புறநிலைமையோடு பிரிக்க முடியாதபடி பிணைக்கப்பட்டுள்ள அகநிலைமை) தொழிலாளி வர்க்கத்தின் உடனடியான முழுமையான விடுதலையை அசாத்தியமாக்குகின்றன”
(ஜனநாயகப் புரட்சியில் சமூக-ஜனநாயகவாதிகளின் இரண்டு செயற்தந்திரங்கள் )
“பருப்பொருளின் ஒற்றை “குணாம்சம்” புறநிலை யதார்த்தமாக இருத்தல், நம்முடைய உணர்வுக்கு வெளியே இருத்தல் என்ற குணாம்சமாகும், அதை அங்கீகரிப்பதுடன் தத்துவஞானப் பொருள்முதல்வாதம் சம்பந்தப்பட்டிருக்கிறது”
(பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்)
“வர்க்க உறவுகளையும் ஒவ்வொரு வரலாற்று சூழ்நிலைக்கும் தனித்துவமான உறுதியான சிறப்பியல்புகளையும் குறித்து மார்க்சியம் நம்மிடமிருந்து கண்டிப்பாக துல்லியமான, புறநிலை வழியில் சரிபார்க்கக்கூடிய பகுப்பாய்வு செய்யுமாறு மார்க்சியம் நம்மைக் கோருகிறது. போல்ஷிவிக்குகளாகிய நாம் கொள்கைக்கு விஞ்ஞான அடித்தளம் அமைத்துக் கொள்ள இன்றியமையாத இந்தக் கோரிக்கையை எப்போது நிறைவு செய்ய முயன்று வந்திருக்கின்றோம்.”
(செயற்தந்திரம் பற்றிய கடிதங்கள் -7)
வாழ்நிலையே உணர்வுநிலையை நிர்ணபிப்பது பற்றி மார்க்ஸ்
*******************************************************************************
மார்க்ஸ்:-
“மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கைக்காக ஈடுபடும் சமூக உற்பத்தியில் திட்டவட்டமான உறவுகளில் தவிர்க்க முடியாத வகையில் நுழைகிறார்கள். இந்த உறவுகள் அவர்களுடைய சித்தங்களில் இருந்து தனித்து நிற்பவையாகும். அதாவது அவர்களுடைய உற்பத்தியின் பொருளாயத சக்திகளின் வளர்ச்சியில் அந்தக் குறிப்பிட்ட கட்டத்துக்குப் பொருத்தமான உற்பத்தி உறவுகளாகும்.
இந்த உற்பத்தி உறவுகளின் கூட்டுமொத்தமே சமூகத்தின் பொருளாதார அமைப்பாக, அதன் உண்மையான அடித்தளமாக அமைகிறது. இதன் மீது சட்டம், அரசியல் என்ற மேற்கட்டமைப்பும் எழுப்பப்பட்டு, அதனோடு பொருந்தக் கூடிய சமூக உணர்வின் குறிப்பிட்ட வடிவங்களும் உருவாகின்றன. பொருளாயத வாழ்க்கையின் உற்பத்தி முறை சமூக, அரசியல், அறிவுலக வாழ்க்கையின் பொதுவான போக்கை நிர்ணயிக்கிறது.
மனிதர்களின் உணர்வுநிலை அவர்களுடைய வாழ்க்கை நிலையை நிர்ணயிப்பதில்லை; அவர்களுடைய சமூக வாழ்க்கை நிலையே அவர்களுடைய உணர்வைநிலையை நிர்ணயிக்கிறது. வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், சமூகத்தின் பொருளாயத உற்பத்திச் சக்திகள் அன்றைக்கிருக்கின்ற உற்பத்தி உறவுகளோடு - அல்லது அவற்றைச் சட்டபூர்வமான வார்த்தைகளில் வெளிப்படுத்துகின்ற சொத்துரிமை உறவுகளோடு - இதுவரை அவை இயங்கி வந்திருக்கின்ற சுற்றுவட்டத்துக்குள் மோதுகின்றன. இந்த உறவுகள் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கான வடிவங்கள் என்பதி லிருந்து அவற்றின் மீது மாட்டப்பட்டிருக்கும் விலங்குகளாக மாறி விடுகின்றன. இதன் பிறகு சமூகப் புரட்சியின் சகாப்தம் ஆரம்பமாகிறது.”
(அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு- முன்னுரை)
எவ்வளவு ஆதாரத்தை கொடுத்தாலும், புதிய பாதையினருக்கு மார்க்சிய அடிப்படைப் புரிதல் ஏற்படாது, அவர்களின் மூளையில் அவ்வளவு குப்பைகள் சேர்ந்திருக்கிறது.