Monday 7 October 2019

புதிய பாதையினரின் மார்க்சியமற்றப் பார்வை


உழைப்புப் பிரிவினையின் வளர்ச்சி சரக்கு உற்பத்தியைத் தோற்றுவிக்கிறது, சரக்கு உற்பத்தி முதலாளித்துவத்தைத் தோறுவிக்கிறது. முதலாளித்துவம் தன்னுகர்வுக்காக உற்பத்தி செய்யாது சமூகத் தேவைக்காக உற்பத்தி செய்கிறது. முதலாளித்துவத்தில் உழைப்புப் பிரிவினை சமூக உற்பத்தியாக வளர்ச்சி அடைகிறது.

முதலாளித்துவ உற்பத்திக்கு முன்பு வரை தனிப்பட்ட உற்பத்தியாளர் தமது கரங்களது உழைப்பாலோ, தமது குடும்பத்தினரின் உழைப்பாலோ உற்பத்தி செய்வதே வழக்கமாக இருந்தது. இத்தகைய உற்பத்தியாளர் உற்பத்திப் பொருளைச் சுவீகரிக்கத் தேவையில்லை. இயல்பாகவே அது முற்றிலும் அவருக்கு உரியதாகிறது. ஆனால் முதலாளித்துவ உற்பத்தியில் இது போல் இல்லை.

முதலாளித்துவ உற்பத்தி முறையில் உழைப்புப் பிரிவினையின் வளர்ச்சியால் உற்பத்தி சமூகமயமாகிவிட்டது. ஒவ்வொரு உற்பத்தியாளரும் பிற உற்பத்தியாளரை சார்ந்தே இருக்க வேண்டி வருகிறது. அதாவது தனது தொழிற்கூடத்திற்கு தேவையான உற்பத்திச் சாதனங்களான இயந்திரத்தை தாமே உற்பத்தி செய்திடாது, பிற உற்பத்தியாளர் செய்ததையே வாங்கிப் பயன்படுத்த வேண்டியதாகிறது. அதே போல் கச்சாப் பொருளையும் பிற உற்பத்தியாளர் செய்ததை நம்பியே இருக்க வேண்டியுள்ளது.

முதலாளித்துவ உற்பத்தியில் உற்பத்தியானது சமூகமயமானப் பின்பும், உழைப்பில் தான் நேரடியாக ஈடுபடாதப் போதும், முற்றிலும் ஏனையோர் உழைப்பின் உற்பத்திப் பொருளாய் இருந்த போதிலும் முதலாளியானர் அதைத் தாமே முன்பு போல் தொடர்ச்சியாகச் சுவீகரித்துக் கொள்கிறார்.

உற்பத்தி சாதனங்களும் மற்றும் பொருளுற்பத்தியும் சாராம்சத்தில் சமூகமயமாவிட்டது. சமூகமயமாகிவிட்ட பொருளுற்பத்திக்கும், முதலாளித்துவச் சுவீகரிப்புக்கும் இடயிலான முரண்பாடு, பாட்டாளி வர்க்கத்துக்கும் முதலாளித்துவ வர்க்கத்துககும் இடையிலான பகைமையாய் வர்க்கப் போராட்டமாய் வெளிப்படுத்திக் கொள்கிறது.

உற்பத்தியின் சமூகத் தன்மைக்கும் உற்பத்தியின் பலன்களைக் கைப்பற்றிக் கொள்ளும் தனியார் முதலாளித்துவ வடிவத்திற்கும் இடையே உள்ள முரண்பாடே- முதலாளித்துவத்தின் அடிப்படை முரண்பாடாகும்.

வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கும் இந்த முதலாளித்துவம், அதாவது முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக – நீதிமூலதனமாக – உலகமயமாதலாக வளர்ச்சியுறும் போது இந்த முரணும் வளர்ச்சியடைந்து முற்றுகிறது. ஒவ்வொரு மறுவுற்பத்தியின் போதும் இந்த முரணையும் சேர்த்தே  மறுவுற்பத்தி உற்பத்தி செய்கிறது. சமூகமயமான உற்பத்திக்கும் தனிவுடைமையிலான சுவீகரிப்புக்கும் இடையேயான இந்த முரண், சமூகமயமான உற்பத்திக்கு ஏற்ப தனிச்சொத்துடைமையை பொதுச்சொத்துடைமையாக மாற்றும் வரை தீருவதில்லை.

இந்த முரண்பாடு, முதலாளியையும் தொழிலாளியையும் சாராத புறநிலையிலான விதியாகும். இதனை மனித சிந்தனையைக் கொண்டு மாற்றிவிட முடியாது. இந்த முடிவு, மார்க்சிய அரசியல் பொருளாதாரம் மற்றும் வரலாற்றியல் பொருள்முதல்வாதம் அணுகுமுறையால் எடுக்கப்பட்டது. இது மார்க்சியம். இதற்கு மாறானது வேற இயம்.

புதிய பாதையினர், இன்றைய கார்ப்பரெட் முதலாளிகள், சோஷலிச உற்பத்தி முறையின் திட்டமிட்ட பொருளாதாரத்தின் சிறப்பம்சங்களை தன்மயமாக்கிக் கொண்டனர் என்று கூறுகின்றனர். இது இயக்கவியலற்ற பார்வையாகும். திட்டமிட்ட பொருளாதாரம் தனிச்சொத்துடைமைப் பொருளாதாரத்தற்கு முரணானதாகும். இதனை கார்ப்பரெட் முதலாளிகளின் சிந்தனை சக்தியால் தகவமைத்துக் கொண்டதாக புதிய பாதையினர் கூறுகினறனர். இது மார்க்சிய அடிப்படைக்கு பொருத்தமற்றதாகும். மார்க்சியத்திற்கு முன்பானவர்களின் பார்வையான சிந்தனையே வாழ்நிலையைத் தீர்மானிக்கிறது என்றதையே அணுகுமுறையாகக் கொண்டுள்ளனர்.

வாழ்நிலை தான் சிந்தனையைத் தீர்மானிக்கும், சிந்தனை வாழ்நிலையைத் தீர்மானிக்காது (அடித்தளம் தான் மேற்கட்டமைப்பைத் தீர்மானிக்கும்) என்பதே மார்க்சிய வரலாற்றியல் பொருள்முதல்வாதமாகும். புதிய பாதையினர் வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை புறக்கணித்தால் இயக்கவியல் பார்வையற்ற கதம்பப் போக்கால் இத்தகைய முடிவிற்கு வருகின்றனர்.

     வர்க்க சமூகம் முழுமையாக நீங்கும் வரை, அடித்தளம் மேற்கட்டமைப்பு என்கிற மார்க்சியக் கோட்பாடு செயற்படும். வளர்சியுற்ற கம்யூனிச சமூகத்தில் அடித்தளமும் மேற்கட்டமைப்பும் பரஸ்பர வினைபுரியும். அதாவது நினைத்தை நினைதப்படி செய்து முடிபதற்கான புறநிலைத் தடைகள் முழுமையும் நீக்கப்பட்டிருக்கும்.

இந்த மார்க்சிய அடிப்படை புரிதல் இல்லாமல் (குறிப்பாக பலப்பிரயோகக் கோட்பாடு) இந்தப் புதிய பாதையினர், அணுவாயுதத் தயாரிப்பு, மற்றும் தன்வமாதல் என்கிறதை மட்டும் எடுத்துக் கொண்டு சாத்தியமில்லாததை சாத்தியப்பட்டதாகக் கருதிக் கொண்டிருக்கின்றனர்.

     காரியத்திற்கு தேவையான பொருளாதாரக் காரணங்களைக் கணக்கில் கொள்ளாது (மார்க்சிய அடிப்படையில் அல்லாது) தங்களது முடிவுகளை எடுக்கின்றனர். மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தையும் வரலாற்றியல் பொருள்முதல்வாததையும் புறக்கணித்ததால் புதிய பாதையினர், எனது எதிர்வினையை புரிந்து கொள்ளாது இருக்கின்றனர்.
************************************************************************************

புதிய பாதையினரின்பழைய பாதை:-








No comments:

Post a Comment