Wednesday, 7 June 2017

விஞ்ஞானக் கம்யூனிசம் (கேள்வி-பதில் வடிவில் ஓர் எளிய அறிமுகம்)

1) கம்யூனிசம் என்றால் என்ன?
பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கான சூழ்நிலைமைகளைப் பற்றிய போதனையே கம்யூனிசம் என்று இதற்கு ஒரே வரியில் எங்கெல்ஸ் பதிலளித்துள்ளார். அந்தப் போதனையே விஞ்ஞானக் கம்யூனிசம் ஆகும்.

2) சமூகத்தில் காணப்படும் உழைப்பாளிகள் அனைவரையும் இந்தப் பாட்டாளி வர்க்கம் என்ற சொல் குறிக்கிறதா?
       இல்லை. இது தொழிற்சாலையில் உழைக்கிற உழைப்பாளிகளையே குறிக்கிறது. விவசாயிகள் முதற்கொண்டு மற்ற தொழிலாளர்களை உழைப்பாளிகள் என்றும் ஆலைத் தொழிலாளர்களைப் பாட்டாளிகள் என்று மார்க்சியம் பெயரிட்டு அழைக்கிறது. பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய தொழிற்புரட்சியைத் தொடர்ந்து இந்தப் பாட்டாளி என்ற புதிய வர்க்கம் பிறந்தது.

3) கம்யூனிசம் என்பது பாட்டாளி வாக்கத்தின் விடுதலைக்கான போதனை என்றால் மற்ற தொழிலாளர்களின் விடுதலையில் அது அக்கறை செலுத்தவில்லையா?
       இதனை அப்படிப் புரிந்து கொள்ளக் கூடாது. மற்ற சமூக அறிஞர்களைப் போல் மக்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் விடுதலை என்று மார்க்சியம் கூறவில்லை. பாட்டாளிகளின் விடுதலை சமூக வளர்ச்சியில் முதலிடம் பிடிக்கிறது. இந்தப் பாட்டாளி வர்க்க விடுதலையைத் தொடர்ந்து மற்ற தொழிலாளர்களின் விடுதலையும் நடைபெறும். பாட்டாளி வர்க்கம் தன்னை முதலில் விடுவித்துக் கொண்டு மற்றவர்களையும் விடுவிக்கிறது. முதலாளித்துவத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் இந்தப் பாட்டாளி வர்க்கத்தின வாழ்வோடு தொடர்புடையதாக இருப்பதால் பாட்டாளிகளின் விடுதலை முதலில் இடம்பெறுகிறது. பாட்டாளி வர்க்கம் தன்னை விடுவித்துக் கொண்டு மற்ற தொழிலாளர்களையும் படிப்படியாக விடுவிக்கிறது. இதனையே விஞ்ஞானக் கம்யூனிசம் சுட்டிக்காட்டுகிறது.


4) கற்பனாவாதிகளைப் பற்றிய மார்க்சிய விமர்சனத்தைச் சற்று விரிவாகக் கூறுங்கள்?
முதலாளித்துவம் ஒரளவுக்கு வளர்ச்சியடைந்த நிலையில், மார்க்சும் எங்கெல்சும் தமது விஞ்ஞானக் கருத்துக்களை உருவாக்கினர். கற்பனாவாத சோஷலிசத்தில் உள்ள குறைபாடாக, மூலதனத்தின் ஆதிக்கம், சுரண்டலின் ஊற்று ஆகியவற்றை அறிந்து கொள்ளாமை என்று கருதினர். முதிர்ச்சியற்ற முதலாளித்துவப் பொருளுற்பத்தி நிலைமைகளுக்கும் முதிர்ச்சியற்ற வர்க்க நிலைமைகளுக்கும் இணைவாய் முதிர்ச்சியற்ற கோட்பாடுகளை அவர்கள் முன்வைத்தனர். சமூகப் பிரச்சினைகளுக்குரிய தீர்வு, வளர்ச்சியுறாத பொருளாதார நிலைமைகளில் புதையுண்டு, இன்னும் மறைந்தே கிடந்தது. இந்தத் தீர்வினைக் கற்பனாவாதிகள் தமது மூளையிலிருந்து உருவாக்க முயன்றார்கள்.

5) மார்க்சின் விஞ்ஞானச் சோஷலிசம் எப்படிப்பட்டது?
மார்க்சிய விஞ்ஞானச் சோஷலிசம் என்பது வரலாற்று வழியில் வளர்ச்சியுற்ற முதலாளிக்கும், பாட்டாளிக்கும் இடையே நடைபெறும் வர்க்கப் போராட்டத்தில் இருந்து தோன்றிய அவசியமான விளைவே தவிர எந்த மேதாவிகளின் மூளையில் உதித்த கருத்தல்ல. கற்பனாவாதிகளைப் போல் சமூக விடுதலைக்கான கருத்தை மூளையில் இருந்தோ, வெற்றுத் தத்துவத்தில் இருந்தோ மார்க்சியம் உருவாக்கவில்லை. பொருளாதார வளர்ச்சியின் தொடர்ச்சியில் ஏற்படும் முற்றிய முரணே தவிர்க்க முடியாத வகையில் சோஷலிச சமூகம் ஏற்படுகிறது என்று மார்க்ஸ் கண்டறிந்தார்.

6) முதலாளித்துவச் சமூகம் எவ்வாறு மறையும்?
முன்பே சொன்னது போல் சமூக வளர்ச்சியின் விதிகள், மக்களின் வழியே செயற்படுகிறது. புரட்சி ஏற்படுவதற்கான சமூக வளர்ச்சி புறக்காரணமாகும், அதனை நடைமுறைப்படுத்தும் கட்சியும், மக்களும் அகக்காரணமாகும். புறமும் அகமும் இணையும் போது சமூக மாற்றம் நடைபெறுகிறது. புரட்சி ஏற்படுத்துவதற்குப் புறச்சூழ்நிலை காரணம் மட்டுமே, அதுவே புரட்சியை முடித்துவிடுவதில்லை, புரட்சி என்னும் காரியத்தை நடத்தி முடிப்பதற்குத் தலைமை அவசியம், அந்தத் தலைமை கம்யூனிஸ்ட் கட்சி என்னும் முன்னணிப் படையாகும்.

முதலாளித்துவ உற்பத்தி முறையில் காணப்படும் முரண்பாடு, வளர்ச்சிக் கட்டத்தில் முற்றி நெருக்கடிக்கு உள்ளாகிறது, இந்த நெருக்கடி புரட்சிக்கான புறநிலைமைகளாகும், இதனை உணர்ந்து தொழிலாளர்களின் முன்னணிப் படையான கம்யூனிஸ்ட் கட்சி நெருக்கடிக்கு உள்ளான அனைத்து உழைக்கும் மக்களையும் இணைத்து, முதலாளித்துவத்தைத் தூக்கி எறிவதன் மூலம் முதலாளித்துவச் சமூகம் மறையும், இது அகநிலைகளாகும்.

சமூக மாற்றம் இவ்வகையான புறநிலை விதிகளால் ஏற்படுவதன் காரணமாகவே “தவிர்க்க முடியாதவகையில்” என்ற வார்த்தையை மார்க்சியம் பயன்படுத்துகிறது..

7) கம்யூனிஸ்ட் கட்சி எப்படிப் பட்டதாக இருக்க வேண்டும்?
ஆம். இது சரியான கேள்வி. கம்யூனிஸ்ட் கட்சியை, கம்யூனிஸ்டுகளும் தொழிலாளர்களும் இவர்களின் தலைவர்களும் நடத்து கின்றனர். இந்தக் கம்யூனிஸ்டுகளுக்கும் தொழிலாளர்களுக்கும் உள்ள உறவைப் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்?

இதனைப் பற்றிக் “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை” தெளிவாகவே சொல்லியிருக்கிறது. கம்யூனிஸ்டுகள் ஏனைய தொழிலாளி வர்க்கக் கட்சிகளுக்கு மாறாக ஒரு தனிக் கட்சியாகக் செயற்படவில்லை. ஒட்டுமொத்தப் பாட்டாளி வர்க்கத்தின் நலன்களைத் தவிரக் கம்யூனிஸ்டுகளுக்கு வேறு தனிப்பட்ட நலன்கள் கிடையாது.

8) அப்படி என்றால் தொழிலாளர்களே கட்சியை நடத்திக் கொள்ளலாமே கம்யூனிஸ்டுகள் எதற்கு?
இதற்கும் “அறிக்கை” பதில் அளிக்கிறது. கம்யூனிஸ்டுகளை ஏனைய தொழிலாளி வர்க்கக் கட்சிகளிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுபவை பின்வருவன மட்டும்தாம்: (1) வெவ்வேறு நாடுகளில் நடைபெறும் பாட்டாளிகளின் தேசிய போராட்டங்களில், கம்யூனிஸ்டுகள் எந்தவொரு தேசிய இனத்தையும் சாராமல், பாட்டாளி வர்க்கம் முழுமைக்கும் உரிய பொதுவான நலன்களைச் சுட்டிக்காட்டி, முன்னணிக்குக் கொண்டு வருகின்றனர். (2) முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிரான தொழிலாளி வர்க்கப் போராட்டம் கடந்து செல்ல வேண்டிய பல்வேறு வளர்ச்சிக் கட்டங்களிலும், எங்கும் எப்போதும் கம்யூனிஸ்டுகள் ஒட்டுமொத்த இயக்கத்தின் நலன்களையே முன்வைக்கின்றனர். எனவே, கம்யூனிஸ்டுகள் ஒருபுறம் நடைமுறை ரீதியில், ஒவ்வொரு நாட்டிலுமுள்ள தொழிலாளி வர்க்கக் கட்சிகளில், மிகவும் முன்னேறிய, மிகவும் உறுதி வாய்ந்த பிரிவாக, மற்றவர்கள் அனைவரையும் முன்னோக்கி உந்தித் தள்ளுகின்ற பிரிவாக உள்ளனர். மறுபுறம் தத்துவ ரீதியில், கம்யூனிஸ்டுகள் பாட்டாளி வர்க்கத்தின் பெருந்திரளினருக்கு இல்லாத ஓர் அனுகூலத்தை, அதாவது, பாட்டாளி வர்க்க இயக்கத்தின் திசைவழியையும், நிலைமைகளையும், இறுதியில் ஏற்படும் பொதுவான விளைவுகளையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் அனுகூலத்தைப் பெற்றுள்ளனர்.

கம்யூனிஸ்டுகளுடைய உடனடி நோக்கம், மற்றெல்லாப் பாட்டாளி வர்க்கக் கட்சிகளின் உடனடி நோக்கம் எதுவோ அதுவேதான். பாட்டாளிகளை ஒரு வர்க்கமாகக் கட்டியமைத்தல், முதலாளித்துவ மேலாதிக்கத்தை வீழ்த்துதல், பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தை வென்றெடுத்தல் ஆகியவையே ஆகும்.

9) அரசியல் அதிகாரத்தை எவ்வாறு வென்றெடுப்பது?
கம்யூனிஸ்ட் கட்சியின் இறுதிகுறிக்கோள் (strategy) சோஷலிச சமூகத்தை அமைப்பதேயாகும். அதனை நோக்கி பயணிப்பதற்குச் செயற்தந்திரத்தை (tactic) அமைத்துக் கொள்கிறது. அதாவது இன்றைய சூழ்நிலையில் அதற்கான செயற்பாட்டை அமைத்துக் கொள்கிறது.

10) வர்க்கப் போராட்டத்தை முன்வைத்து மற்ற போராட்டத்தைக் கம்யூனிசம் இரண்டாம் நிலைக்கு அல்லது பின்னுக்குத் தள்ளுகிறது என்பது உண்மையா?
       மற்ற போராட்டங்களைக் கம்யூனிசம் பின்னுக்குத் தள்ளுகிறது என்ற வார்த்தையே தவறானது. பிற போராட்டங்களை வர்க்கப் போராட்டத்திற்கு உள்ளடங்கி நடத்துகிறது என்பது தான் சரியானது. தேசிய இனப்பிரச்சினை முன்னுக்கு வரும் போது தேசியஇன விடுதலைக்குக் கம்யூனிசம் முதன்மை இடத்தையே தருகிறது.

11) அப்படி என்றால் வர்க்கப் போராட்டத்துக்கு அப்பாற்பட்டு தேசிய இனப்பிரச்சினைக்கு முதன்மை இடம் கம்யூனிசம் தருகிறதா?
       அப்படியில்லை. தேசிய இனப்பிரச்சினை எழுந்துள்ள இடத்தில், பிரச்சினைக்குரிய இரண்டு இனங்களில் உள்ள உழைப்பாளர்களிடையே ஒற்றுமை ஏற்படுத்துவது சாத்தியம் அற்றது. ஒற்றுமைக்குத் தடையாக உள்ள தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதே இங்கே முதலும் முதன்மையானதுமான அரசியல் பிரச்சினையாகிறது. இச்சூழ்நிலையில் ஒடுக்கத்துக்கு ஆளான தேசிய இனம், தமது தேசியத்தின் சுயநிர்ண உரிமை நிலைநிறுத்தும் வகையில் பிரிந்து செல்வதைக் கம்யூனிசம் ஏற்கிறது. இந்தப் பிரிவினை என்பது வர்க்க போராட்டத்திற்கு அப்பாற்பட்டதாகக் கம்யூனிசம் கருதவில்லை. பாட்டாளிகளின் ஒற்றுமையின் நலன்களும் அவர்களது வர்க்க ஒருமைப்பாட்டின் நலன்களும் உள்ளடங்கிய வகையில்தான் தேசிய இனங்களின் பிரிந்து போகும் உரிமையைக் கம்யூனிசம் அங்கீகரிக்கிறது. சோஷலிச அரசு வந்தால் எல்லாம் சரியாகப் போய்விடும் என்று தட்டையாகக் கம்யூனிசம் பேசவில்லை. முதலாளித்துவ ஜனநாயகத்திற்குள் தீர்க்கக்கூடிய பிரச்சினைகளைச் சோஷலிச அரசு ஏற்படும்வரை காத்திருக்கும்படி கம்யூனிசம் கூறவில்லை. ஆனால் சுயநிர்ணய உரிமையைப் பிரிவினைவாதமாகப் புரிந்து கொள்ளக் கூடாது என்பதைக் கம்யூனிசம் எச்சரிக்கிறது.

12) கம்யூனிசம் இன்றைக்குப் பழைமைப்பட்டு விட்டது, எல்லாக் காலத்திற்கும் சர்வரோக நிவாரணியாகக் கம்யூனிசம் செயற்பட முடியாது என்று விமர்சனம் வைக்கப்படுகிறதே?
       கம்யூனிசம் வறட்டுச் சூத்திரவாதம் அல்ல. எதிர்வரும் எல்லாப் புதுப்புது பிரச்சினைகளுக்கும் தீர்வை தயாராகக் கையில் வைத்துக் கொண்டிருக்கவில்லை, மாறிக் கொண்டே இருக்கும் உலகின் நிலைமைகளைப் பார்த்து அலசி ஆராய்ந்து தீர்வை நோக்கி செயற்படுவதற்குக் கம்யூனிசம் ஒரு வழிகாட்டி ஆகும். முதலாளித்துவச் சுரண்டலுக்கு முடிவு ஏற்படும்வரை கண்டிப்பாகக் கம்யூனிசம் தேவைப்படும். கம்யூனிசம் சரி என்பதை இன்றைய பொருளாதார நெருக்கடி உறுதிப்படுத்துகிறது. இந்தப் பொருளாதார நெருக்கடிக்கு கம்யூனிசமே தீர்வாகும்.

13) இந்த விஞ்ஞானக் கம்யூனிசத்தை எவ்வாறு கற்பது?
எந்த ஒரு கோட்பாட்டையும் (theory) அதன் செய்முறையோடே கற்கவேண்டும். ஏன் என்றால் முந்தைய செயற்பாட்டின் அடிப்படையில் தான் அக் கோட்பாடு வகுக்கப்பட்டுள்ளது. அதே போல் விஞ்ஞானக் கம்யூனிசத்தை நாம் காணும் சமூக நடைமுறையோடு இணைத்துக் கற்க வேண்டும். வெறும் ட்டறிவாகக் கற்கக்கூடாது. கம்யூனிசத்தைப் பற்றிய ஏட்டு அறிவை ஏற்றுக் கொள்வதுடன் நின்று விடுவது பெரும் தவறாகும் என்கிறார் லெனின். மேலும் கூறுகிறார், வேலையில் ஈடுபடாமல், போராட்டம் இல்லாமல் கம்யூனிச நூல்களில் இருந்து பெறப்பட்ட ஏட்டறிவு சிறிதும் பயனற்றதாகும். அதேபோல் கம்யூனிச போதனைக்குக் கம்யூனிச நூல்கள் மட்டும் போதுமானது என்று நினைப்பதும் தவறானதாகும். மனிதகுலம் படைத்தளித்து இருக்கும் அறிவுக் கருவூலங்கள்  யாவற்றையும் பற்றிய அறிவைப் பெற்று, உங்கள்  சிந்தனையை நீங்கள் வளமாக்கிக் கொள்ளும் போது மட்டுமே உங்களால் கம்யூனிஸ்ட்டாக முடியும் என்று லெனின் வலியுறுத்தியதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

       கோட்பாடற்ற நடைமுறையும், நடைமுறையற்ற கோட்பாடும் விஞ்ஞானத் தன்மையற்றது.

14) கோட்பாடு - நடைமுறை இதில் எது முக்கியமானது?
       இரண்டும் இணைந்தது என்ற வகையில் இருண்டும் முக்கியமானதே. உலகத் தொழிலாளி வர்க்க இயக்கங்களினுடைய அனுபவங்களின் பொதுமைபடுத்தலே கோட்பாடாகும். ஸ்டாலின் தெளிவாகக் கூறியுள்ளார், புரட்சிகர நடைமுறையுடன் இணைக்கப்பட்டவில்லை என்றால் கோட்பாடு இலக்கற்றதாகி விடும், அதேபோல் புரட்சிகரக் கோட்பாட்டினால் ஒளியூட்டப்பட்டவில்லை என்றால் நடைமுறையானது இருளில் தடுமாறிவிடும், இது உறுதி.

15) விஞ்ஞானக் கம்யூனிசத்தை அறிவதற்குப் படிக்க வேண்டிய நூல்கள் யாவை?

       எங்கெல்ஸ் எழுதிய நூல், கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞானச் சோஷலிசமும். லெனின் எழுதிய நூல் கிராமப்புற ஏழைகளுக்கு. ஸ்டாலின் எழுதிய நூல் லெனினியத்தின் அடிப்படைக்கோட்பாடுகள். மற்றும் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி (போல்ஷ்விக்) கட்சியின் வரலாறு.

Wednesday, 26 April 2017

“தேசிய-கலாசார தன்னாட்சி” என்ற முழுக்கத்தை வைக்கும் கம்யூனிஸ்டுகளை எதிர்த்து லெனின்

தேசிய-கலாசார தன்னாட்சிஎன்ற முழுக்கத்தை வைக்கும் கம்யூனிஸ்டுகளை எதிர்த்து லெனின் 01:-

தேசிய சுயநன்மையைக் கட்டுக்கோப்போடு பாதுகாப்பதற்கு போரடுகின்ற குட்டி முதலாளித்துவத் தேசியவாதத்தை முன்வைப்பவர்கள், தம்மை கம்யூனிஸ்ட் என்றே அழைத்துக் கொள்கின்றனர். உண்மையில் இது பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதத்திற்கு எதிரான தேசியவாதமே என்கிறார் லெனின்:-

சர்வதேசியவாதத்தை வார்த்தைகளில் அங்கீகரிப்பதும் ஆனால் செயலில், எல்லா விதமான பிரச்சாரம், கிளர்ச்சி, செய்முறை நடவடிக்கைகளிலும் அதற்குப் பதிலாகக் குட்டி முதலாளித்துவ தேசியவாதம் மற்றும் அமைதிவாதைப் பின்பற்றுவதும் இரண்டாவது அகிலத்தில் இருந்த கட்சிகளில் மட்டுமன்றி, அதை விட்டு வெளியேறி வந்த கட்சிகளிடமும் இருக்கின்றன, அதிலும் இப்பொழுது கம்யூனிஸ்டு என்று தம்மை அழைத்துக் கொள்கின்ற கட்சிகளிலும் கூட அதிகம் இருக்கின்றன.

இந்தத் தீமைக்கு எதிரான, மிக ஆழமாக வேரூன்றியிருக்கும் குட்டி முதலாளித்துவ தேசியவாதத் தப்பெண்ணங்களுக்கு எதிரான போராட்டத்தின் அவசரத் தன்மை பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தை ஒரு தேசத்திலுள்ள சர்வாதிகாரம் என்பதில் இருந்து சர்வதேசச் சர்வாதிகாரமாக மாற்றுகின்ற கடமையின் அதிகரித்து வருகின்ற தேவையோடு இது மென்மேலும் முக்கியத்துவம் அடைகிறது.

குட்டி முதலாளித்துவத் தேசியவாதம், தேசிய இனங்களின் சமத்துவத்தை அங்கீகரிப்பதையே சர்வதேசியவாதம் என்று பிரகடனம் செய்கிறது, அதற்கு மேல், அதில் ஒன்றுமில்லை. இந்த அங்கீகாரம் வெறும் வார்த்தை அளவில் மட்டுமே என்ற உண்மை ஒரு புறமிருக்கட்டும, குட்டி முதலாளித்துவத் தேசியவாதம் தேசிய சுயநன்மையைக் கட்டுக்கோப்போடு பாதுகாக்கிறது. …”
(
தேசிய, காலனியப் பிரச்சினைகளைப் பற்றி பூர்வாங்க நகல் ஆய்வுரைகள்)
(
கம்யூனிஸ்டு அகிலத்தின் இரண்டாவது காங்கிரசுக்காக)
1920

தேசிய-கலாசார தன்னாட்சிஎன்ற முழுக்கத்தை வைக்கும் கம்யூனிஸ்டுகளை எதிர்த்து லெனின் 02:-

சமூக-ஜனநாயகவாதிகள் எப்பொழுதும் சர்வதேசியவாதக் கருத்து நிலைக்காக நின்றிருக்கிறார்கள், இப்பொழுதும் அதே நிலையில்தான் இருக்கிறார்கள். பண்ணையடிமை சொந்தக்ககாரர்களையும் போலீஸ் அரசையும் எதிர்த்து எல்லா தேசிய இனங்களின் சமத்துவத்தையும் பாதுகாக்கும் பொழுது நாம்- “தேசியக் கலாச்சாரத்தைஅல்ல- ஒவ்வொரு தேசியக் கலாச்சாரத்திலும் ஒரு பகுதியை மட்டுமே, ஒவ்வொரு தேசியக் கலாச்சாரத்தின் முரணில்லாத ஜனநாயக, சோஷலிச உள்ளடக்கத்தை மட்டுமே கொண்டிருக்கிற சர்வதேசியத் கலாச்சாரத்தை ஆதரிக்கிறோம்.

தேசிய-கலாச்சார தன்னாட்சிஎன்ற முழக்கம் தேசங்களின் கலாச்சார ஒற்றுமை என்ற மாயத் தோற்றத்தைக் காட்டித் தொழிலாளர்களை ஏமாற்றுகிறது, ஆனால் நடைமுறையில் இன்று ஒவ்வொரு தேசத்திலும் நிலவுடைமையாளர்களின், பூர்ஷ்வாக்களின் அல்லது குட்டி பூர்ஷ்வாக்களின்கலாச்சாரமேமேலாதிக்கம் வகிக்கிறது
(
லாத்வியன் பிராந்தியத்தின் சமூக-ஜனநாயகவாதிகளின் நான்காவது காங்கிரசின் நகல் திட்டம்- 1913)

தேசிய-கலாசார தன்னாட்சிஎன்ற முழுக்கத்தை வைக்கும் கம்யூனிஸ்டுகளை எதிர்த்து லெனின் 03:-

(
சர்வதேசவாதம் பேசிக் கொண்டு ஆனால் ஒவ்வொரு தேசியத்தின் கலாசார தன்னாட்சியைப் பேசிகொண்டிருக்கும் குட்டி முதலாளித்துவ சிந்தனையாளருக்கு, கம்யூனிஸ்டுகள் ஒவ்வொரு தனியான தேசிய இனப்பிரச்சினைகளுக்க பிரிதல் அவசியம் தான என்பதை ஆய்ந்தே முடிவெடுக்கின்றனர் என்பதை லெனின் வலியுறுத்துகிறார்)
லெனின்:-
சமூக-ஜனநாயகவாதிகள் எல்லா தேசியஇனங்களின் சுயநிர்ணய உரிமைக்கு அங்கீகாரமளிப்பதனால் ஒவ்வொரு தனியான உதாரணத்திலும் அந்தத் தேசிய இனத்தின் அரசுப் பிரிதல் அவசியமானதுதான் என்பதை சுயேச்சையாக மதிப்பிடுவதை சமூக-ஜனநாயகவாதிகள் நிராகரிக்கிறார்கள் என்பது பொருளல்ல என்பது மிகவும் நிச்சயமாகும்.

இதற்க மாறாக, சமூக-ஜனநாயகம் முதலாவதாகவும் மிகவும் அதிகமாகவும் சோஷலிசத்துக்காகப் பாட்டாளி வர்க்கப் போராட்டத்தின் முன்னேற்றத்துக்காக, முதலாளித்துவ வளர்ச்சி நிலைமைகள் மற்றும் எல்லா தேசிய இனங்களின் முதலாளித்துவ வர்க்கத்தினரும் ஒன்று சேர்ந்து பல்வேறு தேசிய இனங்க்ளின் பாட்டாளி வர்க்கத்தினரை ஒடுக்குவதையும் ஜனநாயகத்தின் பொதுவான கடமைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு தன்னுடைய சுயேச்சையான மதிப்பீட்டைச் செய்ய வேண்டும்.”

(
தேசியஇனப் பிரச்சினை பற்றிய ஆய்வுரைகள்-1913 ஜீன் 26)
 —
தேசிய-கலாசார தன்னாட்சிஎன்ற முழுக்கத்தை வைக்கும் கம்யூனிஸ்டுகளை எதிர்த்து லெனின் 04:-

(
முதலாளித்துவத்தின் கீழ் மனிதகுலம் மென்மேலும் அதிகமாக சர்வதேசத் தன்மைப் பெற்றுக் கொண்டிருக்கும் இன்றைய நிலையில்தேசியக் கலாச்சாரம்என்ற முழக்கம் தவறானதாகும். ஏற்கெனவே தோன்றிவிட்ட பாட்டாளி வர்க்க சர்வ தேசிய கலாச்சாரம் எந்த தனித்த தேசியக் கலாச்சாரத்தை உட்கொள்வதில்லை, அதில் காணப்படும் முரணில்லா ஜனநாயக மற்றும் சோஷலிசக் கூறுகளையே ஏற்றுக் கொள்கிறது.)

லெனின்:-
சமூக-ஜனநாயகவாதத்தின் நிலையில் இருந்து தேசியக் கலாச்சாரம் என்ற கோஷத்தைநேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ- வெளியிடுவது அனுமதிக்கப்பட முடியாதது. ஏற்கெனவே முதலாளித்துவத்தின் கீழ் மனித குலத்தின் எல்லா பொருளாதார, அரசியல் மற்றும் ஆன்மீக வாழ்க்கை மென்மேலும் அதிமாக சர்வதேசத் தன்மையைப் பெற்றுக் கொண்டு வருவதால் இந்தக் முழக்கம் தவறானதாகும். சோஷலிசம் அதை முற்றிலும் சர்வதேசியமயமாக்கிவிடும்.

எல்லா நாடுகளையும் சேர்ந்த பாட்டாளி வர்க்கத்தினரால் ஏற்கெனவே முறைப்படியாகத் தோற்றுவிக்கப்பட்டு வரும் சர்வதேசக் கலாச்சாரம்தேசியக் கலாச்சாரத்தை” (எந்தத் தேசியக் குழுவினுடையதாக இருந்த போதிலும்) மொத்தமாக உட்கொள்வதில்லை, ஆனால் ஒவ்வொரு தேசியக் கலாச்சாரத்தில் இருந்து அதிலிருக்கின்ற முரணில்லாத ஜனநாயக மற்றும் சோஷலிசக் கூறுகளைமற்றவற்றை விலக்கிஏற்றுக் கொள்கிறது.”
(
தேசியஇனப் பிரச்சினை பற்றிய ஆய்வுரைகள்-1913 ஜீன் 26)

தேசிய-கலாசார தன்னாட்சிஎன்ற முழுக்கத்தை வைக்கும் கம்யூனிஸ்டுகளை எதிர்த்து லெனின் 05:-

(
குட்டி முதலாளித்துவதேசிய-கலாசார தன்னாட்சிஎன்ற முழக்கம், முரணில்லாத ஜனநாகவாதப் போக்கைவிட பாட்டாளி வர்க்க்துக்கு தீங்குவிளைவிப்பவை என்பதை லெனின் வலியுறுத்துகிறார்)

லெனின்:-
முரணில்லாத ஜனநாயகவாதம் என்ற முழக்கம் பாட்டாளி வர்க்கத்தினரையும் எல்லா தேசிய இனங்களிலும் உள்ள முற்போக்கு ஜனநாயகவாதிகளையும் (இவர்கள் தனிமைப்பட்டிருப்பதை வற்புறுத்துவதில்லை, கல்வி விவகாரங்கள் உட்பட எல்லாத் துறைகளிலும் தேசிய இனங்களில் உள்ள ஜனநாயகச் சக்திகளை ஒன்றுபடுத்த வேண்டுமென்று கோருகிறார்கள்) தனி மொத்தமாக ஒன்றுபடுத்துகின்றன, ஆனால் கலாச்சார-தேசிய தன்னாட்சி வெவ்வேறு தேசிய இனங்களின் பாட்டாளி வர்க்கத்தையும் பிரிக்கிறது, தனித்தனியாக உள்ள தேசிய இனங்களின் பிற்போக்கு மற்றும் முதலாளித்துவ வர்க்கச் சக்திகளோடு சேர்க்கிறது.”
(
தேசியஇனப் பிரச்சினை பற்றிய ஆய்வுரைகள்-1913 ஜீன் 26)

தேசிய-கலாசார தன்னாட்சிஎன்ற முழுக்கத்தை வைக்கும் கம்யூனிஸ்டுகளை எதிர்த்து லெனின் 06:-

(
குறிப்பிட்ட அரசின் கீழ் இருக்கின்ற எல்லா தேசிய இனங்களின் இயக்கங்களும் ஒன்றுபட்ட பாட்டாளி வர்க்க நிறுவனங்களில் இணைக்க வேண்டும். “தேசிய கலாச்சாரம்என்ற முழக்கமானது, பூர்ஷ்வா தேசியவாதிகளது பாட்டாளி வர்க்க எதிர்ப்பு நோக்கங்களை மறைக்கும்)

லெனின்:-
ஒரு குறிப்பிட்ட அரசில் இருக்கின்ற எல்லா தேசிய இனங்களின் தொழிலாளர்களையும், அரசியல், தொழிற் சங்க, கூட்டுறவு, கல்வித் துறை, இதரவை போன்ற ஒன்றுபட்ட பாட்டாளி வர்க்க நிறுவனங்களில் இணைக்க வேண்டும் என்று தொழிலாளி வர்க்க நலன்கள் வற்புறுத்துகின்றன. பல்வேறு தேசிய இனங்களின் தொழிலாளர்களையும் இப்படி ஒரே நிறுவனங்களில் இணைப்பது மட்டுமே சர்வதேச மூலதனத்துக்கும் பிற்போக்கக்கும் எதிராகப் பாட்டாளி வர்க்கம் வெற்றிகரமான போராட்டத்தை நடத்துவதை சாத்தியமாக்கும், “தேசிய கலாச்சாரம்என்ற முழக்கத்தின் மூலம் தங்களுடைய பாட்டாளி வர்க்க எதிர்ப்பு நோக்கங்களை வழக்கமாக மறைத்துக் கொள்ளும் எல்லா தேசிய இனங்களையும் சேர்ந்த நிலவுடைமையாளர்கள், மதகுருக்கள், பூர்ஷ்வா தேசியவாதிகளது பிரச்சாரத்தையும் நோக்கங்களையும் எதிர்த்துப் போராடுவதற்கு உதவும்.

உலகத் தொழிலாளி வர்க்க இயக்கம் ஒரு சர்வதேசப் பாட்டாளி வர்க்கக் கலாச்சாரத்தைப் படைத்துக் கொண்டிருப்பதோடு ஒவ்வொரு நாளும் அதை மென்மேலும் வளர்த்துக் கொண்டிருக்கிறது.”
(
ரு...தொ. கட்சிகயின் மையக் கமிட்டி மற்றும்கட்சி ஊழியர்களின் 1913 கோடை காலக் கூட்டத்தின் தீர்மானங்களில் இருந்து)

தேசிய-கலாசார தன்னாட்சிஎன்ற முழுக்கத்தை வைக்கும் கம்யூனிஸ்டுகளை எதிர்த்து லெனின் 07:-

(
சர்வதேசியக் கலாச்சாரத்தை உருவாக்கவது என்ற அர்த்ததில் தேசியக் கலாச்சாரத்துக்கு விளக்கம் தருவது அகநிலைவாதமே. இவர்கள் இருக்க வேண்டிய இடம் தேசியவாதக் குட்டிப் பூர்ஷ்வாக்கள் மத்தியில் என்கிறார் லெனின்)

லெனின்:-
“”
தேசியக் கலாச்சாரம்என்ற முழக்கத்தின் முக்கியத்துவம் அந்த முழக்கத்துக்குஅதன் வாயிலாகச் சர்வதேசியக் கலாச்சாரத்தை உருவாக்குவது என்ற அர்த்தத்தில்” “விளக்கம் தருவதாகக்குறித்த சிற்றறிவாளி வாக்களிப்பதனாலோ நல்லெண்ணம் கொண்டிருப்பதனாலோ நிர்ணயிக்கப்படுவதில்லை. இந்த முறையில் அதைப் பார்ப்பது குழந்தைத் தனமான அகநிலை வாதம்.

பாட்டாளி வர்க்கத்துக்குப் பணி புரிய வேண்டுமென்று முயலுபவர்கள் எல்லாத் தேசிய இனங்களையும் சேர்ந்த தொழிலாளர்களை ஒற்றுமைப்படுத்த வேண்டும், புர்ஷ்வாத் தேசியவாதத்தை – “சொந்த”, வேற்று, இரு வகை புர்ஷ்வாத் தேசிவாதத்தையும்- நிலைதளராமல், வழிவழுவாமல் எதிர்த்துப் போராட வேண்டும். தேசியக் கலாச்சாரம் என்கிற முழக்கத்தை ஆதரிப்வர்கள் இருக்க வேண்டிய இடம் தேசியவாதக் குட்டிப் பூர்ஷ்வாக்கள் மத்தியில், மார்க்சிவாதிகள் மத்தியில் அல்ல.”
(
தேசியப் பிரச்சினை பற்றிய விமர்சனக் குறிப்புகள்)

தேசிய-கலாசார தன்னாட்சிஎன்ற முழுக்கத்தை வைக்கும் கம்யூனிஸ்டுகளை எதிர்த்து லெனின் 08:-

திண்ணமான ஒர் உதாரணத்தை எடுத்துக் கொள்வோம், தேசிய, மகா ருஷ்யக் கலாச்சாரத்தின் முழக்கத்தை மகா ருஷ்ய மார்க்சியவாதி ஏற்றுக் கொள்ள முடியுமா? முடியாது. அவர் ஏற்க முடியாது. அதை ஏற்றுக் கொள்பவர் யாரும் தேசியவாதிகளின் அணியில் போய் சேர வேண்டும். மார்க்சியவாதிகளின்அணியில் அல்ல.

நம்முடைய பணி இன்றைக்கு ஆதிக்கத்திலுள்ள கறுப்பு நூற்றுவர்களைச் சேர்ந்த, பூர்ஷ்வாக்களது மகா ருஷ்ய தேசியக் கலாச்சாரத்துக்கு எதிராகப் போராடுதல், சர்வதேசிய உணர்வோடும் இதர நாடுகளின் தொழிலாளர்களுடன் நெருக்கமாக இணைந்தும் நின்று, நமது ஜனநாயக, தொழிலாளி வர்க்க இயக்கத்தின் வரலாற்றில் மூலத்துவக்கமாகக் காணப்பட்டு நிற்கும் முனைகளையும் பேணி வளர்க்க வேண்டும்.”
(
தேசியப் பிரச்சினை பற்றிய விமர்சனக் குறிப்புகள்)

தேசிய-கலாசார தன்னாட்சிஎன்ற முழுக்கத்தை வைக்கும் கம்யூனிஸ்டுகளை எதிர்த்து லெனின் 09:-

லெனின்:-
தேசிய இனங்களை ஒடுக்குகின்ற கொள்கை என்பது தேசங்களைப் பிரிக்கின்ற கொள்கையே அதே நேரத்தில் அது மக்களுடைய மனங்களைத் திட்டமிட்ட வகையில் கெடுக்க முயல்கின்ற கொள்கையாகும்.
..
..
ஆனால் தொழிலாளி வர்க்கத்துக்கு வேற்றுமை அல்ல- ஒற்றுமையே வேண்டும் அறிவுபெறாத மக்களிடம் அதன் எதிரிகள் ஏற்படுத்துகின்ற காட்டு மிரண்டித்தனமான தப்பெண்ணங்களையும் மூடநம்பிக்கைகைளையும் காட்டிலும் பெரிய எதிரி அதற்கு வேறு இல்லை.”
(
தேசிய சமத்துவம்)

தேசிய-கலாசார தன்னாட்சிஎன்ற முழுக்கத்தை வைக்கும் கம்யூனிஸ்டுகளை எதிர்த்து லெனின் 10:-

“… “
கலாச்சார-தேசிய சுயாட்சிஎன்று சொல்லப்படுவதை, அதாவது கல்வி பற்றிய விவகாரங்களை அரசிடமிருந்து எடுத்து சம்பந்தப்பட்ட அந்தந்த தேசிய இனங்களுக்கு மாற்றிவிட வேண்டும் என்பதை மார்க்சிவாதிகள் வன்மையாகக் கண்டிக்கிறார்கள். “தேசியக் கலாச்சாரத்தைப்பற்றிய பிரச்சினைகளில் ஒரு குறிப்பிட்ட அரசுக் கூட்டாட்சியில் உள்ள தேசிய இனங்களுக்கு ஏற்ப தேசியச் சங்கங்ளில் கல்வி விவகாரங்கள் பிரிக்கப்பட வேண்டும், அதற்கென்று தனியே டையெட், கல்வி நிதி வரை செலவுத் திட்டம், பள்ளிக்கூட நிர்வாகக் குழுக்கள். கல்வி நிறுவனங்கள் இருக்க வேண்டும் என்பது இத்திட்டத்தின் பொருளாகும்.

இது தொழிலாளி வர்க்கத்தைக் கெடுத்துப் பிரித்து வைக்கும் நாகரிகமான தேசியவாதத்தின் திட்டமாகும். இந்தத் திட்டதுக்கு எதிராக மார்க்சியவாதிகள் தேசங்கள், மொழிகளின் முழுமையான சமத்துவக் கொள்கையை முன்வைக்கிறார்கள், அவர்கள் அதிகார பூர்வமான ஆட்சி மொழியின் அவசியத்தை மறுக்கின்ற அளவுக்குக் கூடப் போகிறார்கள், அதே சமயத்தில் அவர்கள் தேசங்களுக்கு இடையே சாத்தியமான அளவுக்கு மிகவும் நெருக்கமான உறவுகளையும், எல்லா தேசங்களுக்கும் ஒரே மாதிரியான அரசு அமைப்புகளையும், ஒரே மாதிரியான பள்ளிக்கூட நிர்வாகக் குழுக்களையும், ஒரே மாதிரியான கல்விக் கொள்கையையும், ஒவ்வொரு தேசிய பூர்ஷ்வாக்களின் தேசியவாதத்துக்கு- அப்பாவிகளை ஏமாற்றும் நோக்கத்தோடுதேசிய கலாச்சாரம்என்ற முழக்கத்தின் வடிவத்தில் முன்வைக்கப்படும் தேசியவாதத்துக்கு- எதிரான போராட்டத்தில் வெவ்வேறு தேசங்களின் தொழிலார்களின் ஒற்றுமையையும் ஆதரிக்கிறார்கள்.”
(
நாகரிகமான தேசியவாதத்தின் மூலம் தொழிலாளர்களைக் கெடுத்தல்-1914

தேசிய-கலாசார தன்னாட்சிஎன்ற முழுக்கத்தை வைக்கும் கம்யூனிஸ்டுகளை எதிர்த்து லெனின் 11:-
லெனின்:-
எந்த விலை கொடுக்க நேர்ந்தாலும் சிறிய இனங்கள் அப்படியே என்றென்றும் இருந்தாக வேண்டும் என்பதை நாங்கள் ஆதரிப்பவர்கள் அல்ல. பிற நிலைமைகள் பொருத்தமாய் இருக்கையில், சந்தேகத்துக்கு இடமின்றி நாம் மத்தியத்துவத்தையே ஆதரிக்கிறோம், நகர்ப்புற நடுத்தர மக்களது குறிக்கோளான கூட்டாட்சி உறவுகளை எதிர்க்கிறோம்.”
மகா ருஷ்யர்களின் தேசியப் பெருமித உணர்ச்சி குறித்து

தேசிய-கலாசார தன்னாட்சிஎன்ற முழுக்கத்தை வைக்கும் கம்யூனிஸ்டுகளை எதிர்த்து லெனின் 12:-

(
எந்த விலை கொடுக்க நேர்ந்தாலும் சிறிய இனங்கள் அப்படியே என்றென்றும் இருந்தாக வேண்டும் என்பதை நாங்கள் ஆதரிப்பவர்கள் அல்ல என்று சொல்லும் லெனின், ஒடுக்கும் தேசத்திற்கும் ஒடுக்கப்படும் தேசத்திற்கும் கம்யூனிஸ்டுகள் எதை வற்புறுத்த வேண்டும் என்பதை இங்கே வலியுறுத்துகிறார். இதுவே முரணற்ற சர்வதேசியவாதமாகும். இந்த முயற்சிதோல்வி அடையும் நிலையில் ஒடுக்கத்துக்கு ஆளான தேசத்திற்கான பிரிதலுக்கு முழுமையான ஆதரவைத் தரும். அதுவே கம்யுனிஸ்டுகளின் சுயநிர்ணய உரிமையாகும்.)

லெனின்:-
இந்தப் பிரச்சினையைச் சரியாக ஆராயாதவர்கள், ஒடுக்குகின்ற தேசங்களைச் சேர்ந்த சமூக-ஜனநாயகவாதிகள்பிரிந்து போவதற்குரிய சுதந்திரத்தைவற்புறுத்துவதும், ஒடுக்கப்படும் தேசங்களைச் சேர்ந்த சமூக-ஜனநாயகவாதிகள்இணைவதற்குரிய சுதந்திரத்தைவற்புறுத்துவதும்முரண்பாடானதுஎன்று நினைக்கிறார்கள். எனினும் சர்வதேசியவாதத்துக்கும் தேசங்களின் இணைப்புக்கும் வேறு எந்தப் பாதையும் கிடையாது என்பதையும் இன்றைய நிலையில் இந்தக் குறிக்கோளை அடைவதற்கு வேறு எந்தப் பாதையும் கிடையாது என்பதையும் வேறு எந்தப் பாதையும் இருக்க முடியாது என்பதையும் சிறிது சிந்திதாலும் தெரிந்து கொள்ள முடியும்
சுயநிர்ணயம் பற்றிய விவாதத்தைத் தொகுத்துதைத்தல்
தேசிய-கலாசார தன்னாட்சிஎன்ற முழுக்கத்தை வைக்கும் கம்யூனிஸ்டுகளை எதிர்த்து லெனின் 13:-

நாம் அதிகாரத்துக்கு வரும் பொழுது, பின்லாந்துக்கும் உக்ரேனுக்கும் அர்மீனியாவுக்கும் ஜாரிசத்தாலும (மகாருஷ்ய பூர்ஷ்வாக்களாலும்) ஒடுக்கப்பட்ட வேறு எந்தத் தேசிய இனத்துக்கும் இந்த உரிமையை உடனடியாகவும் நிபந்தனை இல்லாமலும் அங்கீகரிப்போம். மறு பக்கத்தில் நாம் பிரிவினையைச் சிறிதும் ஆதரிக்கவில்லை.

சாத்தியமான அளவுக்குப் பெரிய அரசை, மகா ருஷ்யர்களின் அண்டை வீட்டுக்காரர்களாக இருக்கின்ற தேசிய இனங்களின் மிக அதிகமான எண்ணிக்கையினரின் இயன்ற அளவுக்கு மிக நெருக்கமான கூட்டணியை நாம் விரும்புகிறோம், ஜனநாயகம், சோஷலிசத்தின் நலன்களுக்காக, வெவ்வேறு தேசிய இனங்களையும் சேர்ந்த உழைக்கும் மக்களில் சாத்தியமான அளவுக்கு மிக அதிகமான எண்ணிக்கையினரைப் பாட்டாளி வர்க்கத்தின் போராட்டத்துக்குள் ஈர்ப்பதற்காக நாம் இதை விரும்புகிறோம். நாம் பாட்டாளி வர்க்கப் புரட்சிகரமான ஒற்றுமையை, இணைப்பை விரும்புகிறோமே தவி பிரிவனையை அல்ல.”
(
கட்சியின் வேலைத்திட்டத்தைத் திருத்தல் குறித்து)