Saturday 15 June 2019

1) மனிதனின் தோற்றமும் மனிதக் கூட்டத்தின் வாழ்க்கையும்- ஹா.சபிரொவ்


மனிதனின் தோற்றமும் மனிதக் கூட்டத்தின் வாழ்க்கையும். மனித சமூகத்தின் இருத்தலும் வளர்ச்சி யும் உற்பத்தி மற்றும் புனருற்பத்தியின் இரண்டு ரகங் களை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன: உழைப்புக் கருவிகளைக் கொண்டு வாழ்க்கைச் சாதனங்களை (உணவு, உடை, வீடு) உற்பத்தி செய்தல், மனிதனை உற்பத்தி செய் தல். பிந்தியது வரலாற்று ரீதியில் வளர்ச்சியடைகின்ற குடும்ப வடிவங்களில் நடைபெறுகிறது. பூமியில் மனிதன் மற்றும் சமூகத்தின் தோற்றத்தின் வரலாற்று ரீதியான நிகழ்வுப் போக்கைப் புரிந்து கொள்வதில் இது மிகவும் முக்கியமான அம்சமாகும். - மனிதக் குரங்கின் இனத்திலிருந்து மனிதன் வளர்ச்சிய! டைந்திருக்கிறான் என்பதை மாபெரும் பிரிட்டிஷ் இயற்கை விஞ்ஞானியான சார்லஸ் டார்வின் (1809-1882) தன்னுடைய பரிணாமத் தத்துவத்தின் மூலமாக நிரூபித்தார்; ஆனால் சமூகங்களைப் படைத்து அவற்றில் வாழ்கின்ற தகுதி கொண்டவனாக மனிதன் வளர்ச்சியடைந்தது என் என்பதை அவருடைய தத்துவம் விளக்கவில்லை. எங்கெல்ஸ் மனிதக் குரங்கு மனிதனாக மாறிய இடைநிலைப்படியில் உழைப்பின் பாத்திரம் என்னும் நூலில் இதை விளக்குகிறார். உழைப்பே மனிதனைப் படைக்கிறது, பூர்விக டனிெதர்களிடையில் உழைப்புச் செயல்முறையின் போது சமூகப் பிணைப்புகளும் உறவுகளும் தோன்றின என்பதை அவர் நிரூபித்தார்.

பூர்விக மனிதன் உழைப்பின் மூலம், முகிழ்த்துக் கொண்டிருந்த சமூகக் காரணிகள் மூலம் நீண்ட, பரிணாமக் கட்டத்தைக் கடந்து வந்தான். சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு, பூர்விகக் கூட்டு வாழ்க்கை அமைப்பு அதன் வளர்ச்சியின் உச்சத்தை எட்டிய பொழுது அவன் அறிவுடைய மனிதன் (Homo sapiens) ஆனான்.

முதல் மனிதர்கள் பூர்விக மனிதக் கூட்டங்களில் கூடி வாழ்ந்தார்கள். உணவைச் சேகரித்தலும் வேட்டையாடு குலும் (சுவீகரிக்கின்ற பொருளாதாரம்) அவர்களுடைய மக் கியமான தொழிலாக இருந்தன. பூர்விகமான முறையில் கூராக்கப்பட்ட அல்லது சாதாரணக் கம்புகள், கற்கள் மற்றும் பிராணிகளின் எலும்புகள் அவர்களுடைய கருவிகளாக இருந்தன.

இக்கட்டத்தில் கூட்டு வாழ்க்கை பூர்விக சமூக வாழ்க் கையின் அடிப்படையான ஸ்தாபனக் கோட்பாடாக இருந் தது. பூர்வீக மனிதர்களின் கூட்டுச் சமூகத்தில்தான் கருவி களைத் தயாரிக்க முடியும், பயன்படுத்த முடியும், அபி விருத்தி செய்ய முடியும். கூட்டு உழைப்பு பூர்விகமான கூட்டுறவின் வடிவத்தை (பெரிய மிருகங்களைப் பொறி வைத்துப் பிடிப்பதைப் போல) அடைந்தது. உற்பத்தி நட வடிக்கைகள் முன்னேற்றமடைந்த பொழுது பால் மற்றும் வயதின் அடிப்படையில் இயற்கையான உழைப்புப் பிரிவினை ஏற்பட்டது. மனிதர்கள் ஆரம்பத்தில் வேட்டை யாடினார்கள்; பிற்காலத்தில் மீன் பிடித்தார்கள். பெண் கள் வீட்டைக் கவனித்துக் கொண்டார்கள், குழந்தைகளை

வளர்த்தார்கள், கிழங்குகள், பழங்கள், கொட்டைகளைச் சேகரித்தார்கள். கிழவர்கள் கருவிகளைத் தயாரித்தார்கள். "பால் மற்றும் வயதை அடிப்படையாகக் கொண்ட இயற்கை யான உழைப்புப் பிரிவினை கட்டுறவை ஊக்குவித்து கூட்டு உழைப்பின் உற்பத்தித் திறனை அதிகப்படுத்தியது. | பொதுக் குடியிருப்பு பூர்விக மனிதர்களுடைய வாழ்க் ைெகயின் பொருளாதார மற்றும் சமூக அடிப்படையாக இருந்தது. உணவுப் பொருட்களைச் சேகரிக்கின்ற மற்றும் வேட்டையாடுகின்ற பிரதேசம், குடியிருப்பு, படகுகள், மீன் பிடிக்கின்ற வலைகள், இதரவை பொதுச் சொத்தாக இருந்தன. உழைப்புக் கருவிகள் குலத்துக்கு முந்திய கூட்டுச் சமூகத்தின் தனிப்பட்ட உறுப்பினர்களுக்கிடையில் பிரிக்கப் பட்டன; இக்கருவிகள் கூட்டு உழைப்பில் பயன்படுத்தப் பட்டன. சில முதலாளித்துவப் பொருளியலாளர்கள் கூறு வதைப் போல அவை தனியுடைமையின் ஒரு வடிவம் அல்ல. உணவு சேகரித்தலில், கூட்டு அல்லது தனிப்பட்ட வேட்டையில் கிடைத்த உணவுப் பொருட்கள் எல்லோருக்கும் சம அளவில் பகிர்ந்தளிக்கப்பட்டன.

பூர்விக மனிதக் கூட்டத்தில் சமூகப் பிணைப்புகளும் உறவுகளும் மெதுவாக, ஒவ்வொரு படியாக வளர்ச்சி யடைந்தன. மனிதர்களைப் புனருற்பத்தி செய்தல் சமூக வரையளவுகளினால் இன்னும் ஒழுங்குப்படுத்தப்படவில்லை; அவர்களுடைய பாலியல் உறவுகள் முறையான இயல்பைக் கொண்டிருக்கவில்லை.
(கம்யூனிசம் என்றால் என்ன? -முன்னேற்றப் பதிப்பகம் – மாஸ்கோ 1987)

No comments:

Post a Comment