Saturday 15 June 2019

4) குலமரபு அமைப்பின் தகர்வும் வர்க்கங்களின் தோற்றமும் - ஹா.சபிரொவ்


வர்க்கங்களின் தோற்றம். தனியுடைமை தோன்றியதைத் தொடர்ந்து பகை முரணியல்பான வர்க்கங்கள் தோன்றின. சுரண்டலைச் சித்தாந்த ரீதியில் ஆதரிப்பவர்கள் இந்தப் பிரச்சினையை விஞ்ஞான ரீதியில் ஆராய்ச்சி செய்வதில் கவனம் செலுத்துவதில்லை. அவர்கள் வர்க்கங்களும் வாக்கப் போராட்டமும் இருப்பதை மறுப்பதற்கு அல்லது அதன் உண்மையான சாராம்சத்தைத் திரித்துக் கூறு வதற்கு எண்ணற்ற புத்தகங்களை எழுதியிருக்கிறார்கள்.

மார்க்ஸ், எங்கெல்ஸ் மற்றும் லெனின் இந்த சமூக நிகழ்வுகளைப் பற்றிய விஞ்ஞான ரீதியான தத்துவத்தைப் படைத்தார்கள்.

"வர்க்கங்கள் என்பவை வரலாற்று வழியில் நிர்ணயிக் கப்பட்ட சமூகப் பொருளுற்பத்தி அமைப்பில் அவை வகிக் கும் இடத்தாலும், உற்பத்திச் சாதனங்களுடன் அவற்றுக்குள்ள உறவாலும் (மிக பெரும்பாலும் இது சட்டத்தால் நிலை நிறுத்தப்பட்டு வரையறுக்கப்பட்டிருக்கிறது), உழைப் பின் சமூக ஒழுங்கமைப்பில் அவற்றுக்குள்ள பாத்திரத் தாலும், ஆகவே சமூகச் செல்வத்தில் அவற்றின் செயலாட் சிக்கு உட்படும் பங்கின் பரிமாணங்களாலும், இந்தப் பங்கை. அவை சுவாதீனமாக்கிக் கொள்ளும் முறையினாலும் ஒன்றுக்கொன்று வேறுபடும் பெரும் மக்கள் பகுதிகளாகும். வர்க்கங்களானவை சமூகப் பொருளாதாரத்தின் குறிப்பிட்ட ஓர் அமைப்பில் தாம் வகிக்கும் வெவ்வேறு இடங்களின் காரணமாய் ஒன்று மற்றொன்றின் உழைப்பைக் கைப்பற் றிக் கொள்ள முடியும்படியான மக்கள் பகுதிகளாகும்'' என்று லெனின் எழுதினார். (வி. இ. லெனின், தேர்வு நூல்கள், | பன்னிரண்டு தொகுதிகளில், தொகுதி 9, மாஸ்கோ , முன்னேற்றப் பதிப்பகம், 1982, பக்கங்கள் 312-313.)

வர்க்கங்களின் தோற்றமும் அவற்றின் இடைச்செயலின் தன்மையும் வரலாற்று ரீதியில் நிர்ணயிக்கப்பட்ட உற்பத்தி முறைகளில் பொதிந்திருக்கின்றன என்பது பெறப்படும். பூர்விக சமூகத்தின் உற்பத்தி முறை வர்க்கங்கள் தோன்று தலையும் சுரண்டுபவர்கள், சுரண்டப்படுபவர்கள் என்னும் பிரிவினை சமூகத்தில் ஏற்படுவதையும் தவிர்த்தது. உற் பத்திச் சாதனங்களின் சமூக உடையை குலத்தின் உறுப்பி னர்கள் எல்லோரும் அவற்றின் பால் சம அளவான உறவு களைக் கொண்டிருப்பதை, அவர்கள் உழைப்பில் கட்டாயமாகப் பங்கெடுப்பதை, கூட்டு உழைப்பில் உற்பத்தி செய்யப் பட்ட பொருட்களும் வாழ்க்கைச் சாதனங்களும் சமமாக வினியோகம் செய்யப்படுவதை உத்தரவாதம் செய்தது. பூர் விக கம்யூனிசத்தில் வர்க்கங்களும் வர்க்க வேறுபாடுகளும் கிடையாது. அது வர்க்கமற்ற சமூகமாக இருந்தது.

பூர்விகக் கூட்டு வாழ்க்கை அமைப்புக்குரிய உற்பத்தி முறை வளர்ச்சியடைந்த பொழுது தோன்றிய புதிய காரணி கள் குல அமைப்பின் தகர்வுக்கு, கூட்டுச் சமூக உடைமைக்கு பதிலாகத் தனியுடைமை தோன்றுவதற்கு, அடிமைகள், அடிமை உடைமையாளர்கள் என்னும் வர்க்கங்கள் தோன்று வதற்கு வழி வகுத்தன. யுத்தக் கைதிகள் மட்டுமன்றி குலத்தின் முந்திய உறுப்பினர்களும் கூட அடிமைகளாக் கப்பட்டார்கள்; கூட்டுச் சமூகங்களுக்குள் செல்வர்களும் ஏழை களும் தோன்றினார்கள், சமூக ரீதியில் ஓரினத் தன்மை கொண்ட குல அமைப்புக்கு பதிலாக அடிமைகள், அடிமை உடைமையாளர்கள், சுதந்திர விவசாயிகள், கைவினைஞர் கள், வர்த்தகர்கள் மற்றும் வட்டி வாங்குபவர்களைக் கொண்ட அடிமை உடைமைச் சமூகம் ஏற்பட்டது.

சமூகம் பகை முரணியல்பான வர்க்கங்களாக (சுரண்டப் படுபவர்கள் மற்றும் சுரண்டுபவர்கள்) பிரிந்ததும் தனியு டைமை தோன்றியதும் தர்க்க ரீதியான, தவிர்க்க முடியாத நிகழ்வுப் போக்குகள் ஆகும். அது முதல் வர்க்க சமூகங் களின் வரலாறு தொடங்கியது.

உற்பத்திச் சாதனங்களின் பால் சம உறவைக் கொண் டிருக்கின்ற உழைக்கும் மக்களை மட்டும் கொண்ட சமூகம் மறுபடியும் வர்க்கமற்றதாக மாறும். அந்த சமூகத்தில் உற்பத்திச் சாதனங்கள் பொதுவுடைமையாக இருக்கும். இது கம்யூனிசத்தின் சோஷலிசக் கட்டத்தின் முடிவு நிலை யில் நடைபெறும்.
(கம்யூனிசம் என்றால் என்ன? -முன்னேற்றப் பதிப்பகம் – மாஸ்கோ 1987)

No comments:

Post a Comment