Saturday 15 June 2019

2) பூர்விகப் பொதுவுடைமைக் கூட்டு சமூகம் - ஹா.சபிரொவ்


பூர்விகப் பொதுவுடைமைக் கூட்டு சமூகம். பூர்விகக் கூட்டு வாழ்க்கை அமைப்பின் கம்யூனிச இயல்பு துல்லியமாக எப்படி வெளிப்பட்டது? பூர்விக சமூகத்தில் தனியுடைமை மற்றும் அதன் விளைவான மனிதனை மனிதன் சுரண்டல் இல்லை. பூர்விக மக்கள் தொடக்க காலத்தில், குறிப்பாக அவர்களுடைய சமூக வளர்ச்சியின் ஆரம்பக் கட்டத்தில் உபயோகித்த கருவிகள் மிகவும் குறை வான உற்பத்தித் திறனையே கொண்டிருந்தன. மக்களின் கூட்டு வேலைகளில் மட்டுமே அவற்றைத் திறமையுடன் பயன்படுத்த முடியும் (உதாரணமாக, குழுக்களாகச் சேர்ந்து வேட்டையாடுதல், நிலத்தைக் கூட்டாக உழுதல், வீடுகளில் வளர்க்கப்படுகின்ற பிராணிகளைக் காட்டு மிருகங்களிட மிருந்து பாதுகாத்தல், இதரவை). கருவிகளின் தன்மையும் அவற்றின் கூட்டு உபயோகமும் தனியுடைமையை இய லாமற் செய்தன, பொது, கூட்டுச் சமூக உடைமையை பூர்.விகக் கூட்டு வாழ்க்கை அமைப்பின் பொருளாதார அடிப்ப மடையாகச் செய்தன.

பூர்விகக் கூட்டுச் சமூகங்களின் உற்பத்திச் சக்திகள் (பூர்விகமான கருவிகளை உபயோகப்படுத்துவது) சமூக இயல்பைக் கொண்டிருந்தன. அவை கூட்டு நடவடிக்கையின் மூலம் வளர்ச்சி அடைந்தன, உழைப்பின் சமூக அமைப்பை அடிப்படையாகக் கொண்டிருந்தன. உற்பத்தி ரீதியான மற றும் இதர சமூக உறவுகள் தனியார் இயல்பைக் கொண்டிருக்கவில்லை, கூட்டு இயல்பைக் கொண்டிருந்தன. பூர்விக மனிதன் தனியாக இருக்கும் பொழுது இயற்கைச் சக்தி கள் மற்றும் காட்டு மிருகங்களுக்கு முன்னால் பாதுகாப்பற் றவனாக இருந்தான். பூர்விக மக்களின் பலம் அவர்கள் டை எண்ணிக்கையில் இருந்தது. குழுக்களாக இருக்கும் பொழுது மக்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டு உயிர் பிழைக்க முடிந்தது, அதன் மூலம் குல் அமைப்பு மேலும் வளர்ச்சி அடைந்தது.

குல அமைப்பில் எல்லாப் பொருளாயத மதிப்புகளும் சம்மாகப் பகிர்ந்து கொள்ளப்பட்டன. கூட்டுச் சமூகத்தின் ஒவ் வொரு உறுப்பினரும் தொடர்ந்து வாழத் தேவையான பொருட்கள் கூட்டாக உற்பத்தி செய்யப்பட்டன. பூர்விக. மான, குறைந்த உற்பத்தித் திறனைக் கொண்ட கருவிகள், உபரி உற்பத்திப் பொருட்கள் இல்லாமை, அற்பமான உழைப்புப் பிரிவினை ஆகிய காரணங்களினால் அவை சமமாக மட்டுமே பகிர்ந்து கொள்ளப்பட முடியும்.

எங்கெல்ஸ் தன்னுடைய குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் என்னும் நூலில் குலமரபு அமைப் பில் மனிதர்களின் வாழ்க்கைக்குரிய கம்யூனிச அம்சங் களை வர்ணித்தார்; இவ்வமைப்பு வெகுளித்தனமாக இருந் தாலும் அது அற்புதமானது என்று எழுதினார். இரா ணுவம், போலீஸ், நீதிபதிகள், சிறைகள், வீங்கிப் போன, சிக்கலான அரசாங்கப் பொறியமைவு ஆகியவற்றைத் தன் னகத்தே கொண்டிருக்கின்ற அரசு இந்த அமைப்புக்கு அவசியமல்ல; ஏனென்றால் பூர்விகப் பொதுவுடைமைக் கூட்டுச் சமூகங்களின் உறுப்பினர்கள் சுரண்டல், ஒடுக்கு முறை, செல்வர்கள் மற்றும் எழைகள், சலுகை உடையோர் மற்றும் எவ்விதச் சலுகையும் இல்லாதவர்கள், மேலதி காரம் ஆகிய கருதுகோள்களை அறியாதவர்கள். அங்கே அடிமைகள் இல்லை; எல்லோரும் சமமானவர்களாக, சுதந்திரமானவர்களாக இருந்தார்கள்.

பொதுவுடைமைக் கூட்டுச் சமூகம் நோயாளிகளையும் மதிய உறுப்பினர்களையும் பராமரித்தது. நிலம் இனக் குழுவின் பொது உடைமையாக இருந்தபடியால் சில குடும் பத்தினர் ஒன்றுசேர்ந்து உழைத்தனர். சிறு நிலங்கள் குறுகிய காலத்துக்கு மட்டுமே தனிப்பட்ட உடைமையாக இருந்தன.

குலத்தின் பேரவைக் கூட்டங்கள், மூத்தோர் கவுன்சில், சமமான உரிமைகளும் கடமைகளும், மொத்தமாக குலத் தின் மற்றும் தனித்தனியாக உறுப்பினர்களுடைய நலன் களைப் பாதுகாத்தல் ஆகியவை பூர்விக ஜனநாயகமாகும், எல்லோரும் கூட்டு சமூகத்தின் விவகாரங்களில் நேரடியாகப் பங்கெடுத்து முடிவு செய்வதற்கு அது 2 தவியது. கூட்டுச் சமூகத்தின் உறுப்பினர்களின் ஒழுக்கத்திலும் நடத்தை யிலும் ஆணவம், பேராசை, பொறாமை, சுயநலம், செல் வத்தைத் திரட்டுகின்ற வெறி கிடையாது. குலங்களுக்கு ((இனக்குழுக்களுக்கு) உள்ளேயும் குலங்களுக்கு இடையிலும் எழுகின்ற தகராறுகள் சம்பந்தப்பட்ட எல்லாத் தரப் பினரும் பங்கெடுக்கின்ற சகூடங்களில் தீர்க்கப்பட்டன. இரத்தப் பழி வாங்கும் சண்டைகள் அபூர்வமாக நடந்தன.

பூர்விக சமூகம் இலட்சிய சமூகம் அல்ல; அது மனித குலத்தின் குழந்தைப் பிராய்த்துப் புராதன, நயமில்லாத கம்யூனிச வடிவம், அது சமூக வளர்ச்சியில் அழியுமாறு விதிக்கப்பட்டது. வரலாற்று ரீதியில் எதிர்காலம் இல்லாத குலமரபு அமைப்பு காலப் போக்கில் சமூக முன்னேற்றத் துக்குத் தடையாக இருந்தது.

மனித சமூகத்தின் வரலாற்றில் முதல் கட்டம், ஒரு சமூக-பொருளாதார அமைப்பிலிருந்து மற்றொன்றுக்கு, எதிர்காலத்தில் மெய்யான கம்யூனிசத்தை சாதிப்பதற்கு முன்னேற்றத்தைத் தொடங்கியது என்ற முறையில் பூர்விக கம்யூனிசம் நமது கவனத்தைக் கவர்கிறது.
(கம்யூனிசம் என்றால் என்ன? -முன்னேற்றப் பதிப்பகம் – மாஸ்கோ 1987)

No comments:

Post a Comment