Friday 17 March 2023

3) பூர்ஷூவா அரசியல் பொருளாதாரம் - தி.கே.மித்தேராபோல்ஸ்கி

முதலாளித்துவ உற்பத்தி முறையின் வளர்ச்சியுடன் கூடவே விஞ்ஞானத்தின் புதிய பிரிவு ஒன்றும்- அரசியல் பொருளாதாரமும் - வளர்ச்சி அடைந்தது. பூர்ஷூவாக்களின் கைகளில் அது, நிலப்பிரபுத்துவத்திற்கெதிரான போராட்டத்தில் ஒரு தத்துவார்த்த ஆயுதமாக அமைந்தது.

வரலாற்று அரங்கில் பூர்ஷூவா வர்க்கமானது ஒரு முற்போக்கான வர்க்கமாகத் தோன்றியபோது, முதலாளித்துவ உற்பத்தி வளர்ச்சியை நிர்ணயித்த விதிகளைப் பற்றிய விஞ்ஞான அறிவிலும், மூலதனத்தின் அதிகாரம் செல்வாக்குப் பெறுவதைத் தடுக்கும் நிலப்பிரபுத்துவ உறவுகளை அகற்றுவதிலும் அது அக்கறை கொண்டிருந்தது. அந்தக் காலகட்டத்தில் தான் பூர்ஷூவா அரசியல் பொருளாதாரம் உருவாயிற்று. அதற்குப் பண்டைய அரசியல் பொருளாதாரம் என்ற பெயரும் வழங்கப் பட்டது. ஆங்கில விஞ்ஞானிகளான வில்லியம் பெட்டி (1623-1687) ஆடம் ஸ்மித் (1723- 1790) டேவிட் ரிக்கார்டோ (1772-1823) ஆகியவர்கள் அதை வகுத்தவர்களாவர்.

பண்டைய பூர்ஷூவா அரசியல் பொருளாதாரமானது ஒரு குறிப்பிட்ட பண்டத்தின் உற்பத்தியில், செலவிடப்பட்ட உழைப்பின் அளவிற்கும், அந்தப் பண்டத்தின் மதிப்பிற்கும் இடையிலான சம்பந்தம் பற்றிய மிகவும் முக்கியமான விதியைக் கண்டுபிடித்து, மனித உறவுகளின் மிக முக்கிய துறையான உற்பத்தி உறவுகளை, விஞ்ஞான பூர்வமாக ஆராய்வதற்கு சமூக விஞ்ஞானங்களும் மேலும் வளர்ச்சியடைந்தன. அஸ்திவாரமிட்டது. வரலாறு, சட்டம், அழகியல் முதலிய பிற சமூக விஞ்ஞானங்களும் மேலும் வளர்ச்சியடைந்தன.

ஆனால் சமூக விஞ்ஞானங்கள் கருத்துமுதல்வாதக் கண்ணோட்டத்தினால் நிரம்பியிருந்தன. சமூகத்தில் மக்களின் நடவடிக்கைகள் பௌதிக அம்சங்களால், அதாவது ஒரு குறிப்பிட்ட வர்க்கத்துடன் மக்களின் இணைப்பு, அதன் விளைவாக, அவர்களுடைய எண்ணத்திற்கு- விருப்பத்திற்கு அப்பாற்பட்டதாக அமைந்திருக்கும் உற்பத்தி முறையுடன், அமைப்புடன் அவர்களுக்குள்ள தொடர்பு- உறவு ஆகியவற்றால் பிரதானமாக நிர்ணயிக்கப்படுகிறது என அது கருதவில்லை. விஞ்ஞானிகள் எப்படியோ பூர்ஷூவாக்களின் நிலைப்பாடுகளைக் கடைப்பிடித்தார்கள். வர்க்கங்களில்லாத. தனிச் சொத்துடைமை இல்லாத சமூகத்தைப் பற்றி அவர்களால் நினைக்கக் கூட முடியவில்லை.

விஞ்ஞான பூர்வமான உலகக் கண்ணோட்டத்தைப் படைக்க, மனித சமுதாயத்தினால் அதனுடைய வரலாறு முழுவதிலும் சேகரித்துள்ள அறிவில் தேர்ச்சிபெற வேண்டியதும் முதலாளித்துவ சமூகத்தின் ஒழுங்கு முறைகளையும், முரண்பாடுகளையும் வெளிப்படுத்துவதும், ஒரு புதிய சமுதாயத்தை சிருஷ்டிக்க வேண்டிய தொழிலாளி வர்க்கத்தின் சரித்திர பூர்வமான கடமையைச் சரியாகப் புரிந்துகொள்வதும் அவசியமாயிருந்தது. அப்படிப்பட்ட உலகக் கண்ணோட்டத்தை, தொழிலாளி வர்க்கத்தின் சித்தாந்தத்தைப் படைத்தவர்கள் மார்க்ஸூம் எங்கல்சும் ஆவர்.

No comments:

Post a Comment